ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் தற்போது மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகளை தயாரிப்பதற்கான திட்டங்களை ஆராய்ந்து வருகிறது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சர், ஒரு வருடத்திற்கு சுமார் 250,000 எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட EV ஆலையை அமைப்பதற்கான செலவை கண்டறிவதற்காக சில ஆலோசகர்களை நியமித்துள்ளது. மேலும் ஒரு வருடத்திற்கு 7.5 லட்சம் EV கார்களை அதிகரிக்கவும் திட்டம்.
1 மணிநேரத்திற்கு 10 ஜிகாவாட் (GWh) திறன் கொண்ட ஒரு பேட்டரி ஆலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. அதற்காக முன்னாள் BYD நிர்வாகி சஞ்சய் கோபாலகிருஷ்ணன், EV திட்டம் குறித்து ஆலோசனை வழங்க ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக BYD-யில் பணியாற்றிய கோபாலகிருஷ்ணன் இந்த ஆண்டு BYD-யிலிருந்து ஓய்வு பெற்றார், BYD இன் இந்திய வணிகத்தை நிறுவி, மூன்று EV-களை அறிமுகப்படுத்தி, டீலர்ஷிப் நெட்வொர்க்கையும் நிறுவியுள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு முதல் தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வர்த்தகம் வரை அனைத்திலும் ஆர்வமிக்க ஆசியாவின் பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி தற்போது EV வாகன தயாரிப்பில் இறங்கவுள்ளார்.
முகேஷின் நிறுவனம் ஏற்கனவே பேட்டரி தயாரிப்பை செய்து வருகிறது, மேலும் இந்த வாரம் 10 GWh பேட்டரி செல் உற்பத்திக்கான அரசாங்க சலுகைகளைப் பெறுவதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 4.2 மில்லியன் கார்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால் இந்த விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 30 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டில் EV-கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு $5 பில்லியனுக்கும் அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் பேட்டரி தயாரிப்பது இன்னும் தொடங்கப்படவில்லை, ஆனால் எக்ஸைட் மற்றும் அமர ராஜா போன்ற சில உள்ளூர் உற்பத்தியாளர்கள் நாட்டில் லித்தியம்-அயன் பேட்டரி செல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்திற்காக சீன நிறுவனங்களுடன் இணைந்துள்ளனர்.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் சந்தையில் கிட்டத்தட்ட 70% பங்கைக் கொண்டு நாட்டின் மிகப்பெரிய EV உற்பத்தியாளர் ஆகும். ஒட்டுமொத்த வாகன சந்தையில் முன்னணியில் இருக்கும் மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார் ஆகியவை 2025-ஆம் ஆண்டில் EV-களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
ஜூன் மாதம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இரண்டு புதிய துணை நிறுவனங்களை நிறுவியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications