மிளகாய் பஜ்ஜி கணக்கா விற்பனையாகும் EV.. இனியும் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவது சரியா..?

சர்வதேச சந்தையில் ஹைட்ரஜென் எரிவாயுவில் இயங்கும் கார்கள் அறிமுகமாகி ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தி வரும் வேளையில், இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கமும், பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவோர் யோசித்து வாங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இப்படியிருக்கையில் மத்திய கனரகத் தொழில் துறை இணை அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீநிவாச வர்மா 2024 ஆம் ஆண்டில் எவ்வளவு எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த முக்கியமான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு உள்ளார்.

மிளகாய் பஜ்ஜி கணக்கா விற்பனையாகும் EV.. இனியும் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவது சரியா..?

இந்திய எலக்ட்ரிக் வாகன (EV) துறை தொடர்ந்து வளர்ந்து வரும் வேளையில் கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் படி, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் 13.06 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10.39 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 25.64% அதிகம் என்பது தான் தற்போது ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது. நீங்க எலக்ட்ரிக் வாகனம் வாங்குவீர்களா அல்லது பெட்ரோல், டீசல் வாகனம் வாங்குவீர்களா..? கமெண்ட் பண்ணுங்க.

இதேவேளையில் மத்திய அரசு நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க,PM-PRADHAN Mantri Sankalp: Drive Electric Vehicle (PM-e-DRIVE) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் ரூ.10,900 கோடி செலவில் எலக்ட்ரிக் பேருந்துகள், எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்கள், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கப்பட்டு உள்ளது.

PM-e-DRIVE திட்டம் ஏற்கனவே சாதகமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஆதரிப்பதோடு கூடுதலாக, இந்த திட்டம் சார்ஜிங் நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், சோதனை தளத்தை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துகிறது.

இதேவேளையில் EV துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து 'Make in India' திட்டத்தை ஆதரிக்க, PM-e-DRIVE திட்டம் கட்டாயமாக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட உற்பத்தி திட்டத்தை (PMP) பின்பற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை உள்ளூர்மயமாக்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+