டெல்லி நிறுவனமான 'எலைட் மார்க் (Elite Marque)’ ஊழியர்களின் நலனை மையப்படுத்தி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரஜத் குரோவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். ஊழியர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் இந்த விடுமுறை உதவும் என கூறியுள்ளார்.
அக்டோபர் 18 முதல் அக்டோபர் 26, 2025 வரை, மொத்தம் ஒன்பது நாட்கள் முழு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களுக்கு "போனஸ் நேரம்" என்று குறிப்பிட்டு, அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைவதற்கும், மனதை லேசாக்குவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரஜத் குரோவர் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மின்னஞ்சலில் ”காஜு கட்லி சாப்பிடுவதில் தனிப்பட்ட சாதனைகளைப் படைத்திடுங்கள்," மற்றும் "மதியம் வரை தூங்கும் கலையில் சிறந்து விளங்குங்கள்" போன்ற நகைச்சுவையான அறிவுரைகளும் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் நீண்ட நேர வேலை செய்ய பெரு நிறுவன முதலாளிகள் கூறி வரும் நிலையில் டெல்லி நிறுவனத்தின் இந்த முயற்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோவர் தனது செய்தியில், "ஓய்வெடுங்கள், குடும்பத்துடன் இரவு முழுவதும் சிரித்துப் பேசுங்கள், நிறைய இனிப்புகள் சாப்பிடுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும், "அமேசான், ஸ்விக்கி அல்லது ஸொமேட்டோ தவிர்த்து, மின்னஞ்சல்களில் இருந்து முழுவதுமாக விலகி இருங்கள்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். "அதுவரை, புன்னகையைப் பரப்புங்கள், பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடியுங்கள், பண்டிகையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
அனைவரும் "இரண்டு கிலோ எடை அதிகரித்து, பத்து மடங்கு மகிழ்ச்சியுடன்" திரும்பி வர வேண்டும் என்ற விருப்பத்துடன் குரோவர் தனது செய்தியை நிறைவு செய்துள்ளார். இந்த மின்னஞ்சல் ஒரு ஊழியரால் லிங்க்ட்இன் தளத்தில் பகிரப்பட்ட பிறகு உடனடியாகப் பரவி, "உண்மையான பணியிட கலாசாரத்திற்கு" ஒரு உதாரணமாகப் பாராட்டப்படடுகிறது.
அந்த ஊழியர் தனது பதிவில், "உண்மையான பணியிட கலாசாரம் என்பது, ஊழியர்களின் தேவைகளையும் நலனையும் தொடர்ந்து முன்னிறுத்தும் ஒரு முதலாளியால் சிறப்பிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பு அனைத்து மட்டங்களிலும் ஒரு "மகிழ்ச்சியான பரிசாக" பார்க்கப்பட்டது என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.
பல துறைகளில் ஊழியர்கள் அதிக மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்றவற்றுக்கு ஆளாகியுள்ள சூழலில், எலைட் மார்க்கின் இந்த நடவடிக்கை பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் நவீன பணியிடத்தில் சமநிலை மற்றும் ஈடுபாட்டை விரும்பும் நிபுணர்களுடன் இணைந்துள்ளது. பெருகிவரும் போட்டி நிறைந்த கார்ப்பரேட் உலகில், குரோவரின் செய்தி எளிமையானது ஆனால் ஆழமானது - சில சமயங்களில் ஒரு தலைவர் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள காரியம் ஊழியர்களை ஓய்வெடுக்க விடுவதுதான் என பலரும் பாராட்டுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications