பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தியுள்ள நிலையில், பற்பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் இந்தியாவினை சேர்ந்த தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலின் பணி நீக்கம் உள்பட பலவும் அடங்கும்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ட்விட்டரை கையகப்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
முதலீடு எவ்வளவு?
இந்த ஒப்பந்தமானது 44 பில்லியன் டாலர் எனவும் அறிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு அறிவிப்புகளுக்கு இடையில், ஒரு வழியாக ட்விட்டர் ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலர் என்ற நிலையில், அதில் எலான் மஸ்கின் சொந்த முதலீடு என்பதை 15 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்க விரும்பினார்.
பங்கு விற்பனை
இந்த கையகப்படுத்தலுக்கு டெஸ்லா ஆதாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவரின் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்வதை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடன் வாங்கும் திட்டத்தினை கைவிட்ட மஸ்க், கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுமார் 15.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தன் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்தார்.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்திற்கு 27 பில்லியன் டாலர்களுக்கு மேல் பணமாக செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் வெள்ளி கிழமைக்குள் இறுதி செய்யப்படும் எனவும், ஒப்பந்தத்தை முடிப்பதற்காக வங்கிகளில் பல மில்லியன் டாலர்களை கடன் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வங்கிகளில் கடன்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்ததை அடுத்து டெஸ்லா உள்ளிட்ட தனது நிறுவனங்களில் பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தவிர மோர்கன் ஸ்டான்லி, பேங்க் ஆப் அமெரிக்கா, மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்ஷியல் குழுமம், மிசுஹோ, பார்க்லேஸ், சொசைட்டி ஜெனரல் மற்றும் பிஎன்பி பாரிபஸ் பிரான் உள்ளிட்ட வங்கிகளில் 13 பில்லியன் டாலர் கடன் வாங்யுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் தான் உத்தரவாதம்
இந்த கடன் பட்டியலில் மார்கன் ஸ்டான்லி தனியாக 3.5 பில்லியன் டாலர் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், இந்த கடன்களை திரும்ப செலுத்துபதற்கு ட்விட்டர் பொறுப்பாகும். தனிப்பட்ட முறையில் இந்த கடன்களுக்கு எலான் மஸ்க் பொறுப்பல்ல என்றும், ட்விட்டர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் எலான் மஸ்க் பங்கு
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 220 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தினைக் கொண்டுள்ள பில்லியனர் ஆவார். ஏற்கனவே எலான் மஸ்கின் வசம் ட்விட்டரின் 9.6% பங்குகள் இருந்த நிலையில், தற்போது ட்விட்டரை கையகப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் இதுவரையில் லாபம் ஈட்ட முடியவில்லை. இங்கு பற்றாக்குறையே உள்ளது. தற்போது இந்த கையகப்படுத்தல் மேற்கொண்டு ட்விட்டரின் நிதி நிலையில் அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
வளர்ச்சி பாதைக்கு எப்போது?
எனினும் தற்போது கடன் பிரச்சனைக்கு மத்தியில் எலான் மஸ்க் கையகப்படுத்தியுள்ள நிலையில், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக செலவு குறைப்பு நடவடிக்கைகள் பெரியளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications