சமீபத்தில் முடிவடைந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் டி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலக பணக்காரரான எலான் மஸ்க் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அதில், 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்தார். இதனையடுத்து உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

டி.குகேஷ் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற வரலாற்றை நிகழ்த்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளது. இதற்கிடையில், தற்போது டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் நிறுவங்களின் உரிமையாளரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "18வது @ 18!" என்று பதிவிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த போட்டியில், குகேஷ் 14-வது ஆட்டத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை கைப்பற்ற லிரனை 7.5-6.5 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் புகழ்பெற்ற கேரி காஸ்பரோவ், 1985 இல் அனடோலி கார்போவை வீழ்த்தி, 22 வயதில் பட்டத்தை வென்றபோது, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளைய உலக சாம்பியனானார்.
அதேபோல், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியனாக முடிசூட்டப்பட்ட இரண்டாவது இந்தியர் குகேஷ் ஆவார்.வெறும் 18 வயதில், டி குகேஷ் சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ் ரூ. 11.45 கோடி பரிசுத் தொகையைப் பெற்றார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்த முறை ஒவ்வொரு ஆட்ட வெற்றியும் $200,000 அதாவது ரூ. 1.69 கோடி பரிசுடன் வந்தது. அதில்,குகேஷ் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று, $600,000 அதாவது, ரூ. 5.07 கோடியை சம்பாதித்தார்.மீதமுள்ள $1.5 மில்லியன் பரிசுத் தொகை இரண்டு வீரர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் குகேஷின் மொத்த வருமானம் 1.35 மில்லியன் டாலராக அதாது ரூ.11.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்களுக்குப் பொருந்தும். அதிக வருமானம் ஈட்டும் நபர்களுக்கான முதன்மை வருமான வரி விகிதம் 30% ஆகும். கூடுதலாக, ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ள உயர் நிகர மதிப்புள்ள நபர்களுக்கு 4% சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் உடன் சேர்த்து 37% வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
குகேஷின் பரிசுத் தொகைக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டால், அவரது வரிப் பொறுப்பு தோராயமாக $405,000 அதாவது ரூ 3 கோடிக்கு மேல் இருக்கும். கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து, அவரது மொத்த வரி வெளியேற்றம் ரூ.4.67 கோடியைத் தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications