உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், அடுத்த சில வருடங்களில் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வர தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தற்போதைய தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி, புதுமையான மற்றும் மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மலிவு விலை கார்கள் இந்த ஆண்டின் இறுதியிலேயே சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலிவு விலை காரை தான் டெஸ்லா இந்தியாவிலும் மெக்சிகோ-விலும் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனம் கடந்த சில மாதங்களாக மெக்ஸிகோ மற்றும் இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை தீட்டி வந்தது. ஆனால், தற்போது அந்த திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புதிய உற்பத்தி தளத்தை அமைப்பதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டுக்குள் தங்களது உற்பத்தியை 50 சதவீதம் அதிகரிப்பதே தற்போதைய முக்கிய இலக்காக டெஸ்லா நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதன் மூலம், ஓராண்டில் சுமார் 3 மில்லியன் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த புதிய முடிவின் காரணமாக, முன்பு கணிக்கப்பட்ட செலவின குறைப்பின் இலக்கை அடைய முடியாது, மூலதன செலவுகளை கட்டுப்படுத்தி கார் உற்பத்தியை அதிகரிக்க இது உதவும்" என்று டெஸ்லா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 12 சதவீதம் உயர்ந்தது.
டெஸ்லா நிறுவனம் 25,000 டாலர்கள் விலையில், பொதுமக்கள் அதிகம் வாங்கக்கூடிய வகையில் மலிவுவிலை மாடல் 2 (Model 2) காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்த தகவல்களை மறுத்தார்.
ஆனால், மார்ச் காலாண்டு முடிவுகள் மொத்த கதையையும் மாற்றியுள்ளது, அமெரிக்காவிலேயே மலிவு விலை கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது டெஸ்லா.
எலான் மஸ்க் இந்த வாரம் இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான முதலீட்டு திட்டம் குறித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. எலான் மஸ்க் இந்திய பயணத்தை ரத்து செய்வதற்கான காரணம் இப்போது புரிந்துவிட்டது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் சரிந்து வெறும் 1.13 பில்லியன் டாலரை மட்டுமே லாபமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் பேன்ஸ், டெஸ்லா பேன்ஸ்-க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு அதே மார்ச் காலாண்டில் 2.51 பில்லியன் டாலரை லாபமாக டெஸ்லா பெற்று இருந்தது. இதேபோல் மார்ச் காலாண்டில் டெஸ்லா வருவாயில் 9 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது 2012க்கு பின்பு மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களிடையேயான போட்டி கடுமையாகி வருவதாலும், விற்பனை குறைவதாலும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன், டெஸ்லா 6,020 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications