எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் 3வது காலாண்டில் சந்தை கணிப்புகளை எட்ட முடியாத காரணத்தால் டெஸ்லா பங்குகள் சரிவடைந்துள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் டெஸ்லா பங்குகள் முக்கிய இடம் வகிக்கும் நிலையில் காலாண்டு முடிவுக்குப் பின்பு டெஸ்லா பங்குகள் சரிந்துள்ளது.
இந்தச் சரிவுக்கு எலான் மஸ்க்-ன் பேச்சும் முக்கியக் காரணம் என்பது தான் முதலீட்டாளர்களின் கவலை.
டெஸ்லா
டெஸ்லா காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு எலான் மஸ்க் சந்தை ஆய்வாளர்களிடம் பேசுகையில், டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய வர்த்தகத் தளமாக இருக்கும் சீனா மற்றும் ஐரோப்பாவில் ரெசிஷன் பாதிப்ப அதிகமாக இருக்கும் காரணத்தால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனையும், டிமாண்ட் கடுமையாகியுள்ளது.
விற்பனை பாதிப்பு
இதனால் டெஸ்லா விற்பனை பாதித்து உள்ளது, இல்லையெனில் காலாண்டு முடிவுகளில் சிறப்பான அளவுகளைப் பார்த்திருக்க முடியும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதேபோல் நடப்புக் காலாண்டில் டெஸ்லா கார்களுக்கு டிமாண்ட் அதிகமாக இருந்தாலும், வருடாந்திர விற்பனை இலக்கை சப்ளை செயின் பாதிப்பால் எட்ட முடியாத நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார் எலான் மஸ்க்
டெஸ்லா பங்குகள்
இதைத் தொடர்ந்து 6 ப்ரோகரேஜ் நிறுவனங்கள் டெஸ்லா பங்குகளின் டார்கெட் விலையைக் குறைத்துள்ளது. அதிலும் குறிப்பாக Wedbush Securities டெஸ்லா பங்குகளின் டார்கெட் விலையை 60 டாலர் குறைந்து வெறும் 300 டாலராக அறிவித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில்ல அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எலக்ட்ரிக் வாகன சந்தை
இதன் எதிரொலியாக டெஸ்லா பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் 6.65 சதவீதம் வரையில் சரிந்து 207.28 டாலராக உள்ளது. 2022ல் மட்டும் சுமார் 48.17 சதவீதம் சரிந்துள்ளது டெஸ்லா பங்குகள், இதன் 52 வார உச்ச அளவு 414.50 டாலராகும். உலகளவில் மேக்ரோஎக்னாமிக் பிரச்சனை மிகப்பெரிய பாதிப்பை எலக்ட்ரிக் வாகன சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.