ஓரே வழக்கு.. ரூ.4,64,000 கோடியை இழக்கும் எலான் மஸ்க்..!

உலகின் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க், அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய வழக்கினால் பாதிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதனால் ஏற்படும் இழப்பு சாதாரண மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.

2018 இல் பங்குதாரர் உரிமை வழக்கைத் தாக்கல் செய்த பிறகு, அந்த நேரத்தில் ஒன்பது டெஸ்லா பங்குகளை மட்டுமே கொண்டிருந்த ரிச்சர்ட் டோர்னெட்டா என்பவர், ஆன்லைன் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங் நிறுவனமான ஹோம்காஸ்டின் மார்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்தார்.

ஓரே வழக்கு.. ரூ.4,64,000 கோடியை இழக்கும் எலான் மஸ்க்..!


இந்த வழக்கினால் கிடைத்த பிரபலம் தவிர, நியூயார்க்கின் CBGB கிளப்பில் ஹெவி மெட்டல் டிரம்ஸ்களுக்காக அவர் பேர் போனவர். கார்ப்பரேட் ஜாம்பவான்களை நீதிமன்றத்தில் எதிர் கொள்வதற்கும் கேஜெட் கோளாறுகளுக்கும் இடையில் அவரது வாழ்க்கையின் தாளம் மாறி மாறி செல்கிறது.

அத்துடன், கார் கஸ்டம் ரசிகர்களுக்காக ஆடியோ பாகங்கள் தயாரிப்பதில் அவருக்கு மிகுந்த விருப்பம் உள்ளது. ரிச்சர்ட் டோர்னெட்டா 2005 இல் தொடங்கப்பட்டதிலிருந்து 2007 இல் கலைக்கப்படும் வரை டான் ஆஃப் கரெக்ஷனின் டிரம்மராகவும் இருந்தார்.

2018 ஆம் ஆண்டில், டெஸ்லாவின் நிர்வாக குழு மற்றும் பங்குதாரர்கள் எலான் மஸ்கின் ஊதியத் தொகுப்பாக 55 பில்லியன் டாலருக்கு ஒப்புதல் அளித்தனர், இது நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய அளவாகும். நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வருவாய் மற்றும் லாபத்துக்கான லட்சிய இலக்குகளை அடைய மஸ்க்கை ஊக்குவிப்பதே தொகுப்பின் நோக்கமாகும்.

இதை எதிர்த்து டெல்வேர் நீதிமன்றத்தில் ரிச்சர்ட் டோர்னேட்டோ வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மஸ்கின் ஊதியத் தொகுப்பு டெஸ்லா பங்குதாரர்களுக்கு நியாயமற்றது என்றும் அது அவர்களின் உரிமையை நீர்த்துப்போகச் செய்தது என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த ஊதிய தொகுப்பு மஸ்க்குக்கு நிறுவனத்தின் மீது அதிகப்படியான கட்டுப்பாட்டைக் கொடுத்தது. போதுமான செயல்திறன் தடைகளும் இல்லை.

டெஸ்லா வாரியத்தின் அபத்தமான, அளவுக்கதிகமான ஊதிய தொகுப்பை மஸ்க்குக்கு வழங்காமல் திரும்பப் பெறுவதற்கான நீதிமன்றத்தின் முழுமையான மற்றும் அசாதாரணமான நியாயமான முடிவுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்று ரிச்சர்ட் டோர்னேட்டோவின் வழக்கறிஞர்களில் ஒருவரான கிரெக் வரல்லோ கூறியுள்ளார்.

அதேநேரத்தில் மஸ்க் மற்றும் டெஸ்லா வாரியத்தின் வழக்கறிஞர்கள், பங்குதாரர்களின் வாக்கு மூலம் ஊதியத் தொகுப்பு அங்கீகரிக்கப்பட்டது என்றும் மஸ்க் மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான வாதங்களை தவிர்த்து, அந்தத் தேர்தலில் வாக்களித்த 73% பங்குகள் ஊதியத் தொகுப்பை ஆதரித்தன என்றும் வாதிட்டனர்.

ஊதிய தொகுப்பு அங்கீகரிக்கப்பட்ட நேரத்தில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $54 பில்லியனாக இருந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடையும் போது இது $607 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது 1,000%க்கும் அதிகமான லாபம். டெஸ்லா வழக்கறிஞர்கள், நிறுவனத்தின் மதிப்பு உயர்வுக்கு மஸ்க் ஒரு முக்கியக் காரணி என்றும், ஊதிய தொகுப்பு நியாயமான இழப்பீடு என்றும் வாதிட்டனர்.

2028க்குள் மஸ்க் அனைத்து இலக்குகளையும் அடைந்திருந்தால், டெஸ்லாவின் பங்குகளில் 20%க்கும் அதிகமாக அல்லது தற்போதைய விலையில் சுமார் $56 பில்லியன் (சுமார் ரூ. 464000) கோடியைப் பெற்றிருக்க முடியும். ஆனால் ரிச்சர்ட் டோர்னேட்டோ தொடர்ந்த வழக்கால் இதை மஸ்க் இழக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+