தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்று பல துறையில் உச்சத்தை தொட்டு வரும் வேளையில், எலான் மஸ்க் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் தனது சொந்த நிறுவனமான Neuralink மூலம் முயற்சி செய்து வருகிறார். எலான் மஸ்க்-ன் நிறுவனம் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் வாயிலாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.
இந்த முயற்சியின் பல கட்ட சோதனையில் எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் குரங்குகளின் மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வெற்றிக் கண்டது மட்டும் அல்லாமல் முதல் கட்ட சோதனையில் இருந்து பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மகுடமாக அமெரிக்க அரசு Neuralink-ன் சிப்-ஐ மனித மூளையில் வைத்து பரிசோதனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மட்டும் எலான் மஸ்க் வெற்றி அடைந்தால் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்.
Neuralink என்பது 2016ஆம் ஆண்டில் எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட ஒரு brain-implant நிறுவனமாகும், இந்நிறுவனத்தின் மொத்த உரிமையும் எலான் மஸ்க் கையில் மட்டுமே உள்ளது. இந்த நிறுவனம் 2019 முதல் பக்கவாதம், கண்பார்வை பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது பல்வேறு சோதனைகள் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்ய அமெரிக்க அரசின் FDA அமைப்பிடம் விண்ணப்பம் கொடுத்தது.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு Neuralink-ன் முயற்சிகள், சோதனைகள் ஆய்வு செய்து அதன் பின்பு அமெரிக்க அரசின் Food and Drug Administration (FDA) அமைப்பு நியூராலிங்க்-ன் brain-implant அதாவது சிப்-ஐ மனித மூளையில் வைத்து பரிசோதனை செய்ய ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நியூராலிங்க் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை வேகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்புதலுக்கு முன்பு பல முறை FDA அமைப்பு நியூராலிங்க-ன் விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.
FDA அமைப்பு Neuralink-ன் உருவாக்கியுள்ள சிப்-ல் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி குறித்து பல எதிர்ப்புகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. Neuralink-ன் விலங்குகள் சோதனை குறித்து பல கேள்விகளும், பல வழக்குகளும், பல கோரிக்கைகளும் இருந்து வரும் வேளையில் FDA அமைப்பு மனித மூளையில் சோதனை செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளது.