தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத்தில் மாபெரும் முதலீட்டாளர் மாநாடு வைப்ரென்ட் குஜராத் சுமிட் என்ற பெயரில் 10வது முறையாக இக்கூட்டத்தைக் குஜராத் மாநில அரசு நடத்துகிறது. ஜனவரி 10 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரையில் 3 நாள் இக்கூட்டம் நடக்கிறது, முதல் நாள் கூட்டத்தில் அதானி குழுமம், ரிலையன்ஸ், டாடா, மாருதி சுசூகி, ஆர்சிலர் மிட்டல் போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீட்டைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பு, எலான் மஸ்க் வருகையும் தான். ஆனால் இது நடக்காது என்பது உறுதியாகியுள்ளது.

குஜராத் மாநில அரசின் உயர் அதிகாரி கூறுகையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ் குஜராத் வைப்ரென்ட் குளோபல் கூட்டத்திற்கு வரவில்லை. இதன் மூலம் டெஸ்லாவும் இந்தக் கூட்டத்தில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிட வாய்ப்பு இல்லை.
ஆனால் டெஸ்லா குஜராத்தில் முதலீடு செய்ய எப்போதும் வரவேற்கப்படும், குஜராத் அரசு தரப்பிலிருந்தும் டெஸ்லா உடன் தொடர்ந்து முயற்சி செய்யும் எனக் குஜராத் தொழிற்துறை வளர்ச்சி கார்ப்ரேஷன் அமைப்பின் நிர்வாகத் தலைவர் ராகுல் குப்தா தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் குஜராத் வைப்ரென்ட் குளோபல் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் பலமாக நடந்து வந்த நிலையில், குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் ருஷிகேஷ் பட்டேல், எலான் மஸ் குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், குஜராத் மாநில அரசு கொடுத்துள்ள சலுகைகளை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் வைப்ரென்ட் குஜராத் கூட்டத்தில் எலான் மஸ்க் நேரில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து இவரின் பேச்சை அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே அனைவரும் கருதினர். எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் அமைக்கப்படும் ஜிகாபேக்ட்ரி மூலம் இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைத் தீர்ப்பதைத் தாண்டி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் தான் அமைக்க ஆரம்பம் முதல் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்படி டெஸ்லா-வின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கனகச்சிதமாகப் பொருந்தும் இடமாக டிக் செய்யப்பட்ட 3 மாநிலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். குறிப்பாகத் தமிழ்நாடு ஏற்கனவே ஒரு ஆட்டோமொபைல் பேஸ்மென்ட், அதிலும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முன்னோடி.
தமிழ்நாட்டில் இருப்பது போல் வேறு எங்கேயும் இல்லாத அளவுக்குச் சார்ஜிங் கட்டமைப்பு உள்ளது, இதோடு டெஸ்லாவுக்கான பேட்டரியை இறக்குமதி செய்து பெற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வருவது செலவுகள் அடிப்படையில் சிறந்த முடிவாக இருக்கும்.
ஆனா, எலான் மஸ்க் எதிர்ப்பு என்னவோ ஒன்று தான், இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிக் குறைப்பு. இதை மத்திய அரசு கொடுக்காத வகையில் எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை ஒரு படி கூட எடுத்து வைக்கமாட்டேன் எனப் பிடிவாதமாக இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications