இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-20 செயற்கைக்கோள்-ஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இஸ்ரோ, எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்த உதவியை நாடியுள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்வெளித்துறைகளுக்கு இடையிலான ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவும், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் பல முக்கியமான முயற்சிகளை விண்வெளி துறையில் செய்து வருகிறது, இஸ்ரோவில் பல முயற்சிகளை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். இந்த நிலையில் இஸ்ரோ அமைப்பு தவிர்க்க முடியாத காரணத்தால் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளது.

4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-20 செயற்கைக்கோள், இந்தியாவின் தற்போதைய ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டான எல்விஎம்-3 இன் திறனை விட அதிகமாக உள்ளது. இதனால், அதிக உந்து திறன் கொண்ட ராக்கெட் தேவைப்பட்டது. இந்த ஜிசாட்-20 செயற்கைக்கோள்-ஐ பாகுபலி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட் 4 டன் அதாவது 4000 கிலோ எடை வரையில் விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது. எனவே ஜிசாட்-20 செயற்கைக்கோள் 4,700 கிலோ எடை கொண்டுள்ளதால் மாற்று லான்ச் வெஹிக்கல் தேவை.
இந்த நிலையில், ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட்-ஐ பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த ராக்கெட் 8.3 டன் வரையில் பேலோடு கொண்டு செல்லும் திறன் உள்ளது. இந்தப் பெரிய செயற்கைக்கோளை ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்பர் ஆர்பிட் (eostationary transfer orbit) எனப்படும் நிலையில் கொண்டு சேர்க்க ஃபால்கன்-9 ராக்கெட் திறன் போதுமானதாக இருக்கும்.
இஸ்ரோ பொதுவாக பெரிய செயற்கைக்கோள்களை ஏவ ஐரோப்பாவின் அரியன்ஸ்பேஸை (Arianespace) நம்பியிருந்தது. ஆனால் அரியானே-5 ராக்கெட் ஓய்வு பெற்றதாலும், அடுத்த தலைமுறை ராக்கெட்டான அரியானே-6 பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும் ஸ்பேஸ்எக்ஸ் உதவியை நாடியுள்ளது இஸ்ரோ. அரியானே-6 பயன்படுத்து கமர்சியல் ஸ்லாட் இல்லை என்பது தான் தற்போதைய பிரச்சனை.
இதேவேளையில் ரஷ்யா-வின் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அரசியல் சூழலில் தற்போது ரஷ்யா உடன் இணைந்து விண்வெளி துறையில் பணியாற்றுவது சிறந்தாக இருக்காது என்பதால், ஸ்பேஸ் எக்ஸ் இஸ்ரோ-வின் விருப்பமாக மாறியுள்ளது.
14 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்ட ஜிசாட்-20 செயற்கைக்கோள், 70 Gbit/s தரவு பரிமாற்ற திறன் கொண்ட சக்திவாய்ந்த கே-பேண்ட் உயர்-திறன் தகவல் தொடர்பு பேலோட் கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை பெரிதும் மேம்படுத்தும்.
இஸ்ரோவின் இந்த ஜிசாட்-20 செயற்கைக்கோள் மூலம் இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளில் வேகமான இணைய இணைப்பை செயல்படுத்த முடியும். இந்த செயற்கைக்கோள் அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும், விமானங்களில் இணைய இணைப்பை கொண்டு வரவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிசாட்-20 மூலம் எதிர்கொண்ட பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரோ தனது அடுத்த தலைமுறை ராக்கெட் ஆன என்ஜிஎல்வி (Next Generation Launch Vehicle)யை உருவாக்கி வருகிறது. தற்போதைய எல்விஎம்-3 இன் 4 டன் திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும் வகையில் இந்த சக்திவாய்ந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ராக்கெட் இஸ்ரோ-வின் பயன்பாட்டு லிஸ்ட்டில் சேர்ந்தால் Arianespace, ஸ்பேஸ்எக்ஸ் உதவியை நாட வேண்டிய அவசியம் இருக்காது. இஸ்ரோ சொந்தமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்-ஐ விண்ணில் செலுத்த முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications