இந்தியாவின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வெள்ளிக்கிழமை பல முக்கியமான முடிவை அடுத்தடுத்து அறிவித்துள்ளார்.
முதலில் டெக் உலகின் மிகப்பெரிய முக்கியமான டீல் ஆகக் கருதப்படும் டிவிட்டர்-ஐ கைப்பற்றும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்த எலான் மஸ்க், அடுத்ததாக இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா.
டெஸ்லா
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, ஷோரூம் இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து குறைந்த இறக்குமதி வரிகளைப் பெறத் தவறியதால் இந்திய அணியில் சிலரை மட்டும் மீண்டும் பணியில் நியமித்துள்ளது.
இந்தியா
அமெரிக்கா மற்றும் சீனாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தொழிற்சாலையோ அல்லது அசம்பிளி தளமோ அமைக்காமல் இறக்குமதி செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வரி விதிப்பில் தளர்வுகளைப் பெற மத்திய அரசிடம் ஒரு வருடத்திற்கும் அதிகமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் திட்டத்தை நிறுத்தியுள்ளது டெஸ்லா.
இறக்குமதி
டெஸ்லா-வின் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 100% அதிகமான கட்டணங்கள் வரியை குறைக்கும் முன், இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைத்து உற்பத்தி செய்ய டெஸ்லா-வை இந்திய அரசு கேட்டு வந்த நிலையில், டெஸ்லா வரிச் சலுகை மட்டும் கேட்டு வந்தது.
பிப்ரவரி 1
இந்தியா தனது பட்ஜெட் வெளியிட்டில் வரி மாற்றங்களை அறிவிக்கும் என நம்பி டெஸ்லா பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வரும் காலக்கெடுவை நிர்ணயம் செய்தது. ஆனால் வரிக் குறைப்புகள் எதுவும் அறிவிக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கத் தள்ளப்பட்டு உள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூரு
பல மாதங்களாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் டெஸ்லா தனது ஷோரூம்கள் மற்றும் சேவை மையங்களைத் திறப்பதற்கான இடத்தைத் தேடி வந்தது. ஆனால் அந்தத் திட்டமும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications