உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வில் அவ்வப்போது ஊழியர்கள் மீது நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை மிகப்பெரிய சர்ச்சையாகும். இதேபோல் இந்த முறை ஏற்பட்டுள்ள சர்ச்சை மிகவும் பெரியதாக உள்ளது.
உலகம் முழுவதும் வொர்க் லைப் பேலென்ஸ், பணியிடத்தில் மன அழுத்தம், பணிச் சுமை, நீண்ட நேரம் பணியாற்றுவது குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் வேளையில் டெஸ்லா நிர்வாகம், சிக் லீவ் (Sick Leave) எடுத்த ஊழியரின் வீட்டுக்கே சென்று உண்மையிலேயே அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதா என்று செக் செய்யப்பட்டு வருகிறதாம்.

எலான் மஸ்க்-ன் திறமையும், அவர் படைத்த சாதனைகள் அனைத்தும் நாம் அறிந்த ஒன்று தான், இதேவேளையில் அவரின் கண்டிப்பான நிர்வாகம், பணி சூழல் குறித்தும் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இது முற்றிலும் மோசமான அணுகுமுறை எனப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டெஸ்லா தற்போது அமெரிக்கா, சீனா தாண்டி ஜெர்மனி நாட்டிலும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி கார் தொழிற்சாலை மற்றும் நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கத்தை விடவும் அதிகமாக சிக் லீவ் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிக் லீவ் எடுத்துள்ள 30 ஜெர்மன் ஊழியர்களின் வீட்டிற்கு டெஸ்லா நிர்வாகம் ஆட்களை அனுப்பி செக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு டெஸ்லா நிறுவன ஊழியர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த கார்ப்ரேட் ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், டெஸ்லா ஜிகாஃபேக்டரி-ன் நிர்வாக தலைவர் ஆண்ட்ரே தியெரி, இத்தகைய நடைமுறை மிகவும் சாதாரணமானது என்று நிர்வாகத்தின் செயல்பாட்டுக்கு சப்போர்ட் செய்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் மட்டும் டெஸ்லா பெர்லின் ஜிகாஃபேக்டரியில் சிக் லீவ் எடுத்துள்ளோர் எண்ணிக்கை 17% ஆக உயர்ந்தது, இது ஜெர்மன் ஆட்டோமொபைல் தொழில் துறையில் இருக்கும் சக நிறுவனங்களில் சராசரியாக 5% அளவில் மட்டுமே இருக்கும், ஆனால் டெஸ்லா-வில் சராசரி அளவை காட்டிலும் சுமார் 4 மடங்கு அதிகமாக உள்ளது.
ஏன் டெஸ்லா ஊழியர்கள் அதிகமாக சிக் லீவ் எடுக்கின்றனர் என்பதை கண்டறிய, பெர்லின் தொழிற்சாலையின் ஒரு பிரிவின் தலைவர், கடந்த ஒன்பது மாதங்களாக ஊதியம் பெறும் சிக் லீவில் இருக்கும் 30க்கும் அதிகமான ஊழியர்களை தனிப்பட்ட முறையில் சரிபார்க்க மேலாளர்களை அனுப்பியுள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications