உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா-வின் CEO ஆன எலான் மஸ்க்கிற்கு, இதுவரை உலக வரலாற்றில் எந்த ஒரு நிறுவனத் தலைவருக்கும் வழங்கப்படாத மிகப் பெரிய ஊதியத்தை கொடுக்க இந்நிறுவனதின் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் ஒரு டிரில்லியன் டாலர், இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.82 லட்சம் கோடி மதிப்பிலான சம்பளத்தை கொடுக்க நேற்று (நவம்பர் 6) ஆஸ்டினில் நடைபெற்ற டெஸ்லாவின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்கள் சற்ரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய அளவிலான ஆதரவை அளித்துள்ளனர்.
AI வளர்ச்சிக்கு மஸ்க் தேவை: எலான் மஸ்க், டெஸ்லாவின் எதிர்காலத் திட்டங்களான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி, உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பிரம்மாண்ட ஊதியத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா சம்பள திட்டத்திற்கு 75%-க்கும் அதிகமான பங்குதாரர்கள் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், இந்தச் சலுகையைப் பெறுவதன் மூலம், மஸ்க் குறைந்தது ஏழரை ஆண்டுகள் டெஸ்லாவில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அத்துடன், நிறுவனத்தில் அவரது பங்குதாரர் உரிமை 25%-க்கும் அதிகமாக உயரும்.

டெஸ்லாவை விட்டு தான் விலகிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று மஸ்க் முன்னதாகவே மறைமுகமாக எச்சரித்திருந்தார். நிறுவனத்தின் வளர்ச்சியில் தனக்கு முழுமையான அதிகாரம் தேவை என்றும், அதற்கு ஏற்ப தனது பங்குதாரர் உரிமை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். எலான் மஸ்க் விலகினால் டெஸ்லா பங்குகள் பெரிய அளவில் சரிந்துவிடும் என்று நிர்வாக தலைவர் ராபின் டென்ஹோம் எச்சரித்ததன் பின்னணியில், பங்குதாரர்கள் இந்த முடிவை ஆதரித்துள்ளனர்.
ஊதியத்தை பெற கடினமான நிபந்தனைகள்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்-கிற்கு இந்த ரூ.82 லட்சம் கோடி முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால், டெஸ்லாவின் சந்தை மதிப்பில் 12 முக்கியமான மைல்கற்களை அவர் அடைய வேண்டும். டெஸ்லாவின் தற்போதைய மதிப்பு சுமார் 1.5 டிரில்லியன் டாலராக உள்ளது. இந்த ஊதியத் தொகுப்பின் முதல் பகுதி கிடைக்க வேண்டுமென்றால், டெஸ்லாவின் மதிப்பு 2 டிரில்லியன் டாலரை (இரண்டு லட்சம் கோடி டாலரை) எட்ட வேண்டும். மேலும், 20 மில்லியன் டெஸ்லா கார்களை விநியோகிப்பது போன்ற கடுமையான இலக்குகளையும் அவர் பூர்த்தி செய்ய வேண்டும். இப்படி 12 இலக்குகள் அடைந்தால் மட்டுமே எலான் மஸ்க்கிற்கு 1 டிரில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும்.
இது ஒருபுறம் இருக்க, எலான் மஸ்கிற்கு இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டதை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். "டெஸ்லாவின் கார் விற்பனை குறைந்துள்ள நிலையிலும், பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ள நிலையிலும், அவருக்கு இந்த ஊதியம் அளிப்பது நியாயமற்றது" என்று 'டெஸ்லா டேக் டவுன்' போன்ற சமூக ஆர்வலர்கள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அவர்கள், இது ஒரு தோல்விக்காக கொடுக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த பரிசு என்றும் விமர்சித்துள்ளனர். எது எப்படியிருந்தாலும், டெஸ்லாவின் பங்குதாரர்கள் மஸ்க்கின் தலைமைக்குத் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications