உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், தனக்கு இன்னும் அதிக ஊதியம் வேண்டும் என்று டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்தச் சம்பளத் திட்டம் நிறைவேறினால், வரலாற்றிலேயே முதல் டிரில்லியன் டாலர் (ஒரு லட்சம் கோடி டாலர்) சொத்துக்குச் சொந்தக்காரராக எலான் மஸ்க் மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் எலான் மஸ்கின் சம்பள உயர்வு குறித்துப் பங்குதாரர்கள் வாக்களித்து முடிவெடுக்க உள்ளனர்.
சர்ச்சையை கிளப்பும் ஊதிய உயர்வு : எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகள் காரணமாக டெஸ்லா கார்களின் விற்பனை சறுக்கினாலும், நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக அதிகமாக ஏறிவிட்டது. இந்த நிலையில், மஸ்க் மேலும் கூடுதல் சம்பளம் கேட்பது உலக அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒருபக்கம் சில பெரிய ஓய்வூதிய நிதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 'மஸ்க் கேட்கும் பணம் மிக அதிகம். நிர்வாகக் குழு அவருக்குத் தேவையில்லாமல் சலுகை காட்டுகிறது. மஸ்க்கின் சமீபத்திய நடவடிக்கைகள் சரியாக இல்லை' என்று சிலர் கூறுகின்றனர். உலகின் செல்வ ஏற்றத்தாழ்வு குறித்த விவாதத்தில் இதை குறிப்பிட்டு போப் ஆண்டவர் கூட கவலை தெரிவித்துள்ளார்.
மற்றொருபுறம், எலான் மஸ்க் ஒரு பெரிய மேதை. இவரால்தான் எதிர்காலத்தில் ரோபோக்கள் கார்களை ஓட்டுவது, தொழிற்சாலைகளில் வேலை செய்வது போன்றவற்றை டெஸ்லா மூலம் உருவாக்க முடியும். அவர் கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், நிறுவனத்தில் தொடர்ந்து உழைப்பதற்காகவும் இந்த ஊதியம் அவசியம் என்று அவரது ஆதரவாகவும் குரல்கள் வலுத்துள்ளன.
மிரட்டும் மஸ்க் :தனக்கு இந்தச் சம்பளம் தரப்படவில்லை என்றால், டெஸ்லாவை விட்டு வெளியேறிவிடுவதாக எலான் மஸ்க் மிரட்டியுள்ளார். மேலும், தனது சம்பள உயர்வை கேள்வி கேட்பவர்களை 'கிரிமினல் தீவிரவாதிகள்' என்றும் அவர் சாடியுள்ளார். மஸ்க்கின் சம்பள உயர்வு நடைமுறைக்கு வர, அவர் அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி டெஸ்லா கார்களைச் சந்தைக்குக் கொண்டு வருவது, 10 லட்சம் மனித உருவிலான ரோபோக்களை உருவாக்குவது, நிறுவனத்தின் மதிப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்துவது போன்ற பல பெரிய இலக்குகளை எட்ட வேண்டும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் கோரிய முழுப் பங்குகளும் அவருக்குக் கிடைக்கும்.
பணத்தைவிட கட்டுப்பாடு முக்கியமா..?:தற்போது 49,300 கோடி டாலர் (ரூ. 40 லட்சம் கோடிக்கு மேல்) சொத்துடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் மஸ்க், இது பணத்திற்காக அல்ல என்கிறார். டெஸ்லாவின் எதிர்கால ரோபோட் ராணுவத்தை கட்டுப்படுத்த வேறு யாரையும் தன்னால் நம்ப முடியாது என்றும், அதனால் நிறுவனத்தின் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டை அதிகரிக்கவே (தற்போது 15% உள்ள பங்குகளை 30% ஆக உயர்த்த) அதிகப் பங்குகளைக் கோருவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்தப் பணம் குறித்து இன்று பங்குதாரர்கள் போடும் ஓட்டு, மஸ்க்கை உலகின் முதல் 'டிரில்லியன் டாலர் அதிபர்' ஆக்குமா என்பதை தீர்மானிக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications