இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் சேவை.. அன்லிமிடெட் டேட்டாவுக்கு மாத கட்டணம் ரூ.840 தானா?

இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவைகளையும் பிராட்பேண்ட் சேவைகளையும் வழங்குகின்றன. இவற்றுக்கு எல்லாம் போட்டியாக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் களமிறங்க உள்ளது.

ஸ்டார்லிங்கை பொறுத்தவரை செயற்கைக்கோள் வாயிலாக தகவல் தொடர்பு சேவைகளை வழங்குகிறது. செயற்கைகோள்கள் வாயிலாக நேரடியாக டேட்டா சேவைகளை வழங்குவதால் இதன் மூலம் இணைய சேவை வேகமாக கிடைக்கிறது என வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். எனவே தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகள் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் சேவை.. அன்லிமிடெட் டேட்டாவுக்கு மாத கட்டணம் ரூ.840 தானா?

ஏற்கனவே இந்திய சந்தையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் பொருட்டு முதல் கட்டமாக ஸ்டார்லிங்க் நிறுவனம் 840 ரூபாய்க்கு அதாவது அமெரிக்க டாலர் மதிப்பில் பார்த்தால் 10 டாலருக்கும் கீழ் அன்லிமிடெட் டேட்டா சேவையை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.

இந்திய சந்தையில் குறைந்தது 10 மில்லியன் வாடிக்கையாளர்களையாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தொடக்கத்தில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சந்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் குறைந்த தொகையிலேயே இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முன் வரும் என Analysys Mason என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான அஸ்விந்தர் சேத்தி தெரிவிக்கிறார். இந்தியாவின் தொலைதொடர்புத்துறை ஆணையமான டிராய் சாட்டிலைட் மூலம் இணையசேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகபட்ச உரிம கட்டணங்களை விதித்துள்ளது. இது ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து தக்க வைப்பதில் தான் முதலில் அவை கவனம் செல்லும் என அவர் கூறுகிறார்.

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஒரு தொலைதொடர்பு சந்தையாக இந்தியா திகழ்ந்து வருகிறது. தற்போது 7 ஆயிரம் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி ஸ்டார்லிங்க் 4 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டிருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 18,000 ஆக அதிகரித்தால் இந்தியாவில் 1.5 மில்லியன் சந்தாதாரர்களுக்கு சேவை வழங்க முடியும் என ஐஐஎஃப்எல் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்கள் 8 லட்சம் டவர்களை நிறுவி வாடிக்கையாளர்களுக்கு இணைப்புகளை வழங்குகின்றன. இத்துடன் போட்டியிட வேண்டும் என்றால் எலான் மஸ்க் இந்தியாவிற்கு பிரத்தியேகமாக சேவை வழங்குவதற்கு என செயற்கைக்கோள்களை அதிகரிக்க வேண்டி இருக்கும் என ஐஐஎஃப்எல் ஆய்வு அறிக்கை கூறுகிறது. சர்வதேச அளவில் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு 500 டாலர்கள் வரை கட்டணமாக பெறுகிறது. இதுவே இந்தியாவை சேர்ந்த தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் 5 லிருந்து மாதத்திற்கு 7 டாலர்கள் வரையிலேயே கணிசமான டேட்டா சேவைகளை வழங்கி விடுகின்றன.

இத்துடன் பல்வேறு ஓடிடி செயலிகளும் இலவசமாக கிடைத்து விடுகின்றன. எனவே இந்திய சந்தையை பொறுத்தவரை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் கூறுகிறது. இந்த பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை கிடைக்க உதவினால் நன்றாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Take a Poll

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+