டெல்லி: இந்தியா என்கிற துணை கண்டத்தின் தென் புறம் கடலாலும், வடக்குப் புறம் மலைகள் மற்றும் நில பரப்புகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.
தெற்கில் கடல் வழியாகவும், வடக்கில் நிலம் மற்றும் மலை வழியாகவும் கடந்து வந்து நம்மை சீனர்களோ, பாகிஸ்தானியர்களோ, ஆப்கானிஸ்தானியர்களோ அல்லது வேறு எந்த ஒரு நாட்டுக்காரர்களும் தாக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணம் நம் நாட்டு ராணுவம் தான்.
அப்படிப்பட்ட ராணுவ வீரர்களுக்குத் தான் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது இந்திய ராணுவ தலைமையகம்.
போர்கள்
இதுவரை, இந்தியா 1947, 1962, 1965, 1971, 1999 என சில பெரிய போர்களைச் சந்தித்து இருக்கிறது. இந்த போர்களில் எல்லாம் இந்தியா பெரும்பாலும் வெற்றி வாகை சூடி இருக்கிறது. இந்த போர்களில் 1965 மற்றும் 1971 போர்கள் குறிப்பிட வேண்டியவைகள்.
விவரம்
1965-ல் இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாவது போர் மூண்டது. அதனைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு மீண்டும் வங்க தேசப் பிரச்சனை காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டு வங்க தேசம் என்கிற தனி நாடே உருவானது எல்லாம் வரலாறு சொல்லும் உண்மை.
அதிகாரிகள்
இந்த 1965 மற்றும் 1971 போர் காலங்களில், இந்திய ராணுவத்துக்கு உடனடியாக பல அதிகாரிகள் தேவையாக இருந்தார்கள். அப்போது சூட்டோடு சூடாக தேர்வு செய்யப்பட்டு, ராணுவத்தில் அதிகாரிகளாக பலர் பணியில் அமர்த்தப்பட்டனர். அவ்வளவு அவசரமாக ராணுவத்தில் பணியில் சேர்க்கப்பட்ட அதிகாரிகளும் போரில் இந்தியா வெற்றி பெற பக்க பலமாக இருந்தார்கள்.
நோ பென்ஷன்
இப்படி திடீரென ராணுவத்தில் சேர்க்கப்பட்ட அதிகாரிகளை Emergency Commissioned officers,
Short Service Commission officers என்று சொல்கிறார்கள். இந்த வழியாக ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர்கள், பென்ஷன் பெறும் தகுதிக்கும் வரும் முன்னரே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்களாம். பென்ஷன் இல்லாமல் தான் தங்கள் சொச்ச வாழ்க்கையைக் கழிக்க வேண்டும்.
பென்ஷன்
எனவே, இந்த Emergency Commissioned officers and
Short Service Commission officers-களுக்கு பென்ஷன் கொடுக்குமாறு, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு, ராணுவ தலைமையகம் கோரிக்கை வைத்து இருக்கிறார்களாம். இந்த கோரிக்கை நிறைவேறினால், மேலே சொன்ன அதிகாரிகளுக்கும் மாதா மாதம் பென்ஷன் கிடைக்குமாம்.
ராணுவ தளபதி
சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ராணுவ தளபதி எம் எம் நராவனே "இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய ராணுவம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார்". இந்திய எல்லைகளைக் காத்த ராணுவ வீரர்களுக்கு பென்ஷன் இல்லாமல் வேறு யாருக்கு சார்..? சல்யூட்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications