ஒரு வழியா ரிசர்வ் வங்கி கொடுத்த ஆறு மாத கால அவகாசம் முடிந்தாயிற்று. வங்கிகளும் தங்களது வேலையினை செய்ய ஆரம்பிச்சாச்சு. இனி என்ன நடக்க போகிறதோ?
இந்த கொரோனா வந்தாலும் வந்தது. மக்களை படு பாதாளத்திற்கே தள்ளி விட்டது எனலாம். கடந்த மார்ச் மாத இறுதியில் போடப்பட்ட லாக்டவுன், தற்போது வரையில் பற்பல தளர்வுகளுடன் நீடித்து வருகின்றது.
இந்த லாக்டவுன் காலத்தில் தங்களது வேலை, வருமான வாய்ப்புகளை இழந்த மக்கள், தங்களது அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்ட நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தவித்து வந்தனர்.
ரிசர்வ் வங்கியின் அனுமதி
மக்களின் கஷ்டத்தினை புரிந்து கொண்ட ரிசர்வ் வங்கியானது, மக்களுக்கு சிறிது காலத்திற்கு விடுதலை அளிக்கும் விதமாக, 6 மாத காலத்திற்கு வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக கடந்த ஆறு மாத காலமாக வங்கி பிரச்சனையில் இருந்து சற்று தள்ளியிருந்த மக்களுக்கு தற்போது மீண்டும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
மோசமான கடன் அதிகரிக்கலாம்
ரிசர்வ் வங்கியானது ஓரு முறை கடன் மறுசீரமைக்க அனுமதித்த போதிலும் கடன் தடை காலம் முடிந்து விட்டதால், இந்தியாவின் வங்கித் துறை மோசமான கடன்களில் கணிசமான உயர்வைத் தொடங்கக்கூடும் என்றும் வங்கி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாம் காலாண்டுகளில் இதன் தாக்கம் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.
இரண்டாம் காலாண்டில் தாக்கம் இருக்கும்
ஆக கொரோனா தொற்று நோயின் தாக்கம் விரைவில் வங்கி புத்தகங்களில் எதிரொலிக்க கூடும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனினும் அது எந்தளவுக்கு பிரச்சனை இருக்கும் என்று எந்த உறுதியும் இல்லை. இதே மோசமான கடன்களின் அதிகரிப்பு, இரண்டாவது காலாண்டில் மட்டுமே பிரதிபலிக்கும் என்று எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் சித்தார்த் புரோஹித் மணிக்கன்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
உண்மையான தாக்கம்?
எனினும் உண்மையான தாக்கம் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் தான் தெரியவரும். மேலும் கடன் மறுசீரமைப்புக்கு எத்தனை கடன்கள் தகுதி பெறும் என்பதை பொறுத்தே இந்த தாக்கம் இருக்கும். ஆக இந்த தாக்கத்தினை தற்போது கணக்கிடுவது மிக கடினம் என்றும் சித்தார்த் கூறியுள்ளார்.
நடுத்தர அளவிலான கார்ப்பரேட்டுகளில் தாக்கம் இருக்கும்
90 நாட்களுக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த கடன் செயல்படாத சொத்து என கூறப்படுகிறது. சித்தார்த்தின் கருத்து படி, வங்கிகளுக்கு கடன் செலவு அதிகரிக்கலாம். மேலும் நடுத்தர அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். இது 2022ம் நிதியாண்டில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
வாராக்கடன் அளவு அதிகரிக்கும்
இதே ஏஞ்சல் புரோக்கிங் ஆய்வாளர் ஜெய்கிஷன் பர்மர், மறுசீரமைப்பு திட்டம் வங்கிகளுக்கு ஒரளவுக்கு உதவும். இது நன்கு சிந்திக்கப்பட்ட ஒரு பயிற்சியாகும். எனினும் வங்கித் துறையில் கணிசமான தாக்கம் இருக்கும் என்றும் பர்மர் கூறியுள்ளார். மறுசீரமைப்போடு கூட, வாராக்கடன் அளவும் 30 -40% அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த கட்டத்தில் 8 - 9 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் வாரக்கடன் அளவு, அடுத்த ஒரு வருடத்தில் 11 - 12 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும் என பர்மர் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?
கோவிட் -19 தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை மறைக்க வங்கிகள், கடந்த இரண்டு காலாண்டுகளில் கணிசமான ஏற்பாடுகளைக் செய்துள்ளன. இதே ஆர்பிஐ தரப்பில் மோசமான கடன்கள் குறித்தும் எச்சரிக்கை விடுத்திருந்தது. கடந்த நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில், ரிசர்வ் வங்கி 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாராக்கடன் 14.7% உயரக்கூடும் என்று கூறியுள்ளது.
வங்கிகள் என்ன சொல்கின்றன?
இதே வங்கித் தரப்பில் இந்த தாக்கத்தினை பொறுத்தவரை இதனை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில் கடன் வாங்கியவர்களில் எத்தனை பேர் உண்மையான மன அழுத்தத்தின் கீழ் இந்த திட்டத்தினை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதனை கணிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இந்த அறிக்கைகள் மேற்கொண்டு வங்கிகள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள போகின்றன என்பதை தான் சுட்டிக் காட்டுகின்றனவோ தவிர, மக்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று கூறவில்லை.
மக்களுக்கு ஏதேனும் அறிவிப்பு வருமா?
சொல்லப்போனால் தற்போது தான் லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள் சற்றே கூடுதலான ஆட்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆக வேலையிழந்தோர் இனி தான் வேலை தேடி வேலைக்கு செல்ல முடியும். பலர் பழையபடி தொழில்சாலைகளுக்கு செல்ல முடியும். ஆக இனி வேலைக்கு சென்று இனி தான் கடனை கட்டும் நிலைக்கு வருவார்கள். பொறுத்திருந்து தான் பார்ப்போமே. ரிசர்வ் வங்கி இது குறித்து ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுமா என்று...
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications