துபாயை சேர்ந்த விமான சேவை வழங்குநரான எமிரேட்ஸ் குழுமம் தங்களின் ஊழியர்களுக்கு 5 மாத சம்பளத்தை போனஸ் வழங்குவதாக அறிவித்து அனைவரையும் திக்குமுக்காட வைத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நிறுவனத்தின் லாபம் உச்சத்தை எட்டி இருப்பதே இதற்கு காரணம்.
எமிரேட்ஸ் குழுமம் 2023 - 2024ஆம் நிதியாண்டில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 71% அதிகரித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் உச்சபட்ச லாபத்தை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் லாபம் 8.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.
கொரோனா தொற்றின் போது உலகம் முழுவதும் விமான சேவைகள் முடங்கின. இதனால் மக்கள் விமான போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அந்த வகையில் எமிரேட்ஸ் குழுமமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டி தற்போது பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது.
எமிரேட்ஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தங்களது நிறுவனம் விமான சேவையில் வலுவான இடத்தில் இருப்பதற்கு லாப விகிதமே சாட்சி என கூறியுள்ளார்.
2023-24 ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 71% உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து எமிரேட்ஸ் குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 வார சம்பளம் அதாவது ஐந்து மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தற்போது எமிரேட்ஸ் குழுமத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து 1,12,406 ஆக இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 10 சதவீதம் அதிகம். இதனிடையே உலக அளவில் தங்களது சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என எமிரேட்ஸ் குழுமம் அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ் குழுமத்தில் எமிரேட்ஸ் மற்றும் டிநடா என்ற இரண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் எமிரேட்ஸ் மட்டுமே 4.7 பில்லியன் டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63 சதவீதம் அதிகமாகும் . அதேவேளையில் டிநடா நிறுவனம் 0.4 பில்லியன் டாலர்களை லாபமாக பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாப விகிதம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ் குழுமம் 2023-24ஆம் நிதியாண்டில் 51.9 மில்லியன் பயணிகள் தங்களது விமானங்களில் பயணம் செய்திருப்பதாகவும், 2.2 மில்லியன் டன் சரக்குகளை கடந்த ஓராண்டில் கொண்டு சென்றிருப்பதாகவும் கூறியுள்ளது.
151 இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வரும் எமிரேட்ஸ் குழுமம் தற்போது 260 விமானங்களை பயன்படுத்தி வருகிறது. புதிதாக 310 விமானங்களுக்கு ஆர்டர் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications