பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக நடப்பு ஆண்டிலும் பரவி வரும் ஓமிக்ரான் மத்தியில் மீண்டும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சில நிறுவனங்களில் ஊழியர்கள் ஹைபிரிட் மாடல் பணியினை செய்து வருகின்றனர்.
ஹைபிரிட் மாடல் பணி
எனினும் தற்போது ஆறுதல் கொடுக்கும் விஷயம் என்னவெனில், கடந்த ஆண்டினை போல நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணி என்பது இல்லை. வீட்டில் இருந்தும் பணி செய்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்தும் பணி செய்யலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இது ஒரு நெகிழ்வு தன்மையை அளிக்கும் என்பதால் இது நிரந்தரமாக தொடரலாம் என பல நிறுவனங்களும் ஆலோசித்து வருகின்றன.
வரிச்சலுகை
முன்னதாக இது தற்காலிகமாக பார்க்கப்பட்டாலும், தற்போது இது ஒரு நிரந்தர வழியாக பார்க்கப்படுகிறது. எனினும் ஒரு சாரர் 10 AAன் மூலம் கிடைக்கும் சலுகை கிடைக்காது என்ற கருத்தும் நிலவி வருகின்றது. ஏனெனில் சிறப்பு மண்டலங்களில் கிடைக்கும் வரிச்சலுகையினை நிறுவனங்களால் பெற முடியாது.
பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும்?
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பல நிறுவனங்களும் ஹைபிரிட் மாடல் பணியினை ஆராய்ந்து வருகின்றன. இதனால் சிறப்பு மண்டலத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கிடைக்கும் வரிச்சலுகையில் எவ்வித பாதிப்பும் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும்.
செலவு அதிகரிக்கும்
ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதால், இணையக் கட்டணங்கள், வாடகை, மின்சார கட்டணம், பர்னிச்சர் செலவு என பல செலவுகளும் செய்யும் நிலைக்கு உள்ளது. இதற்காக நிறுவனங்கள் அலவன்ஸ்களை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் நிறுவனங்கள் கூடுதல் செலவு செய்யும் நிலை இருந்தாலும், வரிச்சலுகையும் கிடைக்காது.
வரிச்சலுகை
இங்கிலாந்தில் ஒருவர் வீட்டில் இருந்து செய்யும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு 6 பவுண்டுகள் கொடுக்கப்படுகிறது. அதோடு வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு 50,000 ரூபாய் கூடுதலாக விலக்கு அளிக்க பரிந்துரை செய்யப்படுகின்றது.
ஆக இதேபோன்று வருடத்திற்கு ஒரு முறை 50,000 ரூபாய் வரையில் சலுகை அளிக்கலாம். அதேபோல மற்ற செலவுகளுக்கு 5000 ரூபாய் அல்லது கூடுதலாக வரிச்சலுகை 60,000 ரூபாயாக கொடுக்க வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இது ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டும். குறிப்பாக சாமனியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications