சென்னை: லக்பதி நிதி திட்டத்தை போன வருடம் சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி நாடு முழுவதும் இருக்கும் 2 கோடி கிராமங்களில் உள்ள பெண்களின் திறன் மேம்பாட்டுக்கு, பயிற்சி அளிக்கும் வகையில் இந்த திட்டத்தினை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் எவ்வாறு எல்இடி பல்பு தயாரிப்பது, ஆளில்லா விமானங்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங் வேலைகள் போன்ற திறன்களில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்தத் திட்டத்தினை விரிவுபடுத்தும் விதமாக மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்பதி தீதி திட்டத்தினை கொண்டு, அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் இரண்டு கோடி பெண்களில் இருந்து மூன்று கோடி பெண்களுக்கு உயர்த்த உள்ளதாக அறிவித்தார்.

இதனால் சுமார் மூன்று கோடி பெண்கள் தொழில்முனையும் பெண்களாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பு உள்ளது. இந்த திட்டத்தைப் பயன்படுத்தி பெண்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் செய்யும் பொருட்களை எப்படி தயாரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் இந்த சுயதொழில் மூலம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை கண்காட்சியிலோ அல்லது மார்க்கெட்டில் விற்பனை செய்யலாம். வரும் காலத்தில் பெண்களை பெரும் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும். மேலும் தனக்குத் தேவையான அனைத்தையும் தாமே செய்து கொள்வதற்கும் வழி வகுக்கும். இந்தத் திட்டத்தினை தமிழ்நாட்டில் "லட்சாதிபதி சகோதரி" என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?:
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நீங்கள் கால்நடை, மளிகை கடை, பெட்டிக்கடை போன்ற சிறு தொழில்கள் செய்யக்கூடியவர்களாக இருந்தால் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். சுய உதவிக் குழுக்களில் இருக்கும் பெண்கள் ஏதேனும் பொருட்களை இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்தால் உங்களுக்கு அதற்கான உரிமம் பெற்று தரப்படும். லக்பதி தீதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்களது வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் 18 முதல் 50 வயதுடைய பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் குறைந்தது 11 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை பயிற்சிகள் அளிக்கப்படும். அதற்குப் பிறகு இந்த திட்டத்தினை பயன்படுத்தி தொழில் தொடங்கும் பெண்களுக்கு, முதலீட்டிற்காக ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. ஆனால் இதில் பயன் பெறும் பெண்கள் தங்களிடம் 10% முதலீட்டு தொகையை வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க லக்பதி யோஜனா இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, இந்த திட்டம் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications