சியோமி, ஹூவாய், பாக்ஸ்கான் என சமீபத்தில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது, ஆனால் டெஸ்லா வந்த புதியதில் மெகா திட்டம் போட்ட ஆப்பிள் இன்று வரையில் ஓரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.
ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், 10 வருடங்களுக்கும் அதிகமாக செயல்படுத்தி வந்த எலக்ட்ரிக் கார் திட்டத்தை மொத்தமாக கைவிட்டுள்ளதாக, ரிட்டர்ஸ் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஹூண்டாய் உடனும், பாக்ஸ்கான் உடனும் இணைந்து கார் தயாரிக்கும் திட்டம் குறித்து பேசி வந்தது.

இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் திட்டத்தில் பணியாற்றிய பல ஊழியர்கள், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
இது உண்மையாக இருந்தால், ஆப்பிள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும். இது முதலீட்டாளர்களுக்கு நிறுவனத்தின் முயற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் போட்டியிடும் திறன் அதிகரிக்கும். கடந்த 5 வருடத்தில் ஆப்பிள் AI துறையில் பல நிறுவனங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள், குறிப்பாக ஆல்பாபெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகியவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதன்மை பங்கு வகிக்கின்றன. ஆனால், ஆப்பிள் இதுவரை செயற்கை தொழில்நுட்பத்தில் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலை வகிக்கும் டெஸ்லா உட்பட பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், முதலீடுகளை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். சிலர் முழுவதுமாக பேட்டரி மூலம் இயங்கும் கார்களுக்கு பதிலாக ஹைப்ரிட் கார்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார் திட்டத்திற்கு ʼʼProject Titanʼʼ என்று பெயரிட்டது. சுயமாக ஓட்டும் வாகனங்களில் ஆர்வம் அதிகரித்தபோது, ஒரு தசாப்தம் முன்னர் இந்த திட்டத்தை தொடங்கியது. 2020 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டிலேயே வாகனத்தை வெளியிடுவதைப் பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
கொரோனா தொற்று காலத்தில் self-driving EV வாகன திட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தான் 190 பேரை இப்பிரிவு பணியில் இருந்து அகற்றியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications