இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் E20 பெட்ரோல் குறித்து கடுமையான விமர்சனத்தை எழுந்து வரும் வேளையில் மத்திய அரசு மிக முக்கியமான ஆலோசனையை செய்து வருகிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பது மூலம் அரசுக்கும் பெரும் செலவின குறைப்பு ஏற்படுவதாக தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களுக்கு தங்களுடைய வாகனத்தில் மைலேஜ் பிரச்சனை என்பது பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது.

E20 பெட்ரோல் பயன்படுத்துவது மூலம் மைலேஜ் குறைப்பாடு மட்டும் அல்லாமல் இன்ஜினும் அதிகளவில் பழுதாவதாக மக்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கூறி வருகிறது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் E10 பெட்ரோலை கொண்டு வர தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் வேளையில், மத்திய அரசு தற்போது சந்தையில் விற்கப்படும் XP95, Speed மற்றும் Power95 ஆகிய வகை பெட்ரோலை E10 பெட்ரோலாக விற்கலாமா என்பதை ஆலோசனை செய்து வருகிறது.
தற்போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த XP95, Speed மற்றும் Power95 பெட்ரோலை எத்தனால் கலக்காத தூய பெட்ரோலாகவும், ஆக்டேன் அதிகம் கொண்ட பெட்ரோலாகவும் விற்பனை செய்து வருகிறது. தற்போது மத்திய அரசு இதையும் E10 பெட்ரோலாக விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இல்லையெனில் E10 பெட்ரோலுக்காக தனி பிராண்ட், தனி சப்ளை செயின், தனி சேமிப்பை உருவாக்க வேண்டும். இதனால் தேவையற்ற செலவுகள் உருவாகும் என்பதால் இத்தகையை முடிவை மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
தற்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுடன் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
E10 பெட்ரோல் கட்டாயம் தற்போது விற்கப்படும் சுத்தமான பெட்ரோலிக்கு இணையாக அல்லது சிறிய அளவில் குறைவான விலையில் மட்டுமே விற்கப்படும். சமீபத்தில் தான் மத்திய அரசு E20 பெட்ரோலில் குளோரைடு கலப்பின அளவை 3ppm-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற முக்கிய வரம்பை கட்டாயமாக்கும் விதிமுறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான பணிகளையும் இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) ஈடுபட்டுள்ளது.
இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டால் இந்தியாவில் பெட்ரோல் தயரிக்கும் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய சுத்திகரிப்பு முறையை மாற்றி E20 பெட்ரோலின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும். இதனால் செலவுகள் அதிகரித்து பெட்ரோல் ரீடைல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த 2 நடவடிக்கை மூலம் இந்தியாவில் சுத்தமான பெட்ரோல் விற்பனை சந்தையில் இருந்து மொத்தமாக நீக்கி E10, E20 ரக பெட்ரோல் தான் பொது உடைமையாக உள்ளது.
மேலும் E20 பெட்ரோல் மூலம் வாகனங்கள் சேதமடைய முக்கிய காரணம் இதில் இருக்கும் குளோரைடு தான் என்பது உறுதியான நிலையில் இதை E10, E20 ரக பெட்ரோல் என இரண்டிலும் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications