கர்நாடகா: ஓரிடத்தில் அரிதாக கிடைக்கும் ஒரு பொருளை நாம் உருவாக்கி விற்பனை செய்யும் போது குறுகிய காலத்திலேயே அது நல்ல லாபத்தை பெற்று தரும். அப்படி ஒரு முயற்சியில் ஈடுபட்டு பெரிய தொழில் முனைவோராக மாறி இருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர்.
கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியை சேர்ந்தவர் சேத்தன் ஷெட்டி. மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஒரு பெரிய நிறுவனத்தில் பெங்களூருவில் சேல்ஸ் பிரிவில் தலைமை பொறுப்பு வகித்து வந்தார்.

சேத்தன் ஷெட்டியின் குடும்பத்தினர் மங்களூர் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். விடுமுறை நாட்களில் இவர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று வருவது வாடிக்கை. அப்படி விவசாயத்தின் மீது ஆர்வம் பிறந்துள்ளது.
முதல்கட்டமாக ஊரில் தங்களுடைய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காளான் வளர்ப்பில் ஈடுபட்டார். இது இவருக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது. எனவே தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்தார்.
இந்தியாவில் அரிதாக கிடைக்கக்கூடிய பழங்களை நாம் விளைவித்து விற்பனை செய்யலாம் என்று யோசனையும் இவருக்கு பிறந்துள்ளது. முதலில் தன்னுடைய திட்டத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. எப்பொழுது விடுமுறைக்காக ஊருக்கு சென்றாலும் அதிகப்படியான நேரம் விவசாய நிலத்திலேயே இருந்து உதவிகளை செய்து விவசாயம் சார்ந்த பணிகளுக்கு தன்னை நன்றாக பழகிக் கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நிலத்தில் மஞ்சள் பயிரிட்டார். முதலில் அவருக்கு 165 கிலோவிற்கு மஞ்சள் அறுவடை நடைபெற்றது. அதனை மஞ்சளாகவே விற்பனை செய்யாமல் மஞ்சள் பவுடராக மாற்றி ஒரு கிலோ 450 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்துள்ளார். இது அவருக்கு நல்ல லாபத்தை தந்தது.
2017 ஆம் ஆண்டு வேலையை விட்டு சொந்த ஊருக்கே திரும்பிய அவர் தன்னுடைய ஊரில் இன்னும் கூடுதலாக நிலங்களை வாங்கி நான்கு ஏக்கர் பரப்பளவில் ரம்புட்டன்(Rambutan), மேங்கோஸ்டின் (mangosteen), அவகேடோ(avacado) மற்றும் பப்பாளி ஆகிய ஆகியவற்றை பயிரிட்டார். கேரளாவில் இருந்து இதற்கான மரக்கன்றுகளை வாங்கி வந்ததாகவும், அப்போது ஒரு ரம்பூட்டன் மரக்கன்றின் விலை 350 ரூபாய் என்றும் கூறுகிறார்.

பொதுவாக 35 அடி இடைவெளியில் தான் ரங்புட்டன் கன்றுகளை நட வேண்டும் என்பது விதி ஆனால் அதனை சற்றே மாற்றி அமைத்து 15 அடி இடைவெளியில் இவர் பயிரிட்டுள்ளார். இந்தியாவில் பொதுவாக ரம்புட்டன் என்பது மலேசியா தாய்லாந்து மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சேத்தன் இதனை இந்தியாவிலேயே விளைவித்ததால் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது.
தற்போது இந்தியா முழுவதும் டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு இவரது விவசாயம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு கூடுதலாக 100 ரம்புட்டன் மரங்களை நட்டு இருப்பதாகவும் இது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் விளைச்சலை கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரம்புட்டன், அவகேடோ ஆகியவற்றுடன் வெண்ணிலா, மேஸ் பிளவர் என பல வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். இயற்கையான முறையில் தாங்கள் விளைவிப்பதால் வாடிக்கையாளர்களுடைய நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications