பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும்போது 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்று ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள். ஆனால் அப்போதெல்லாம் மாணவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் கல்லூரி படிப்பு படித்துவிட்டு வேலைக்கு செல்லும்போது தான் 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரியவரும்.
இந்த நிலையில் ஒரு என்ஜினியரிங் கல்லூரி மாணவர் 12ஆம் வகுப்பில் தன்னுடைய மதிப்பெண் குறைந்ததால் எந்த பெரிய நிறுவனம் தன்னைநேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.
12ஆம் வகுப்பு மதிப்பெண்
பொறியல் கல்லூரி மாணவர் ஒருவர் தனது 12-ம் வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் அவரை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
பிடெக்
இது குறித்து அவர் மேலும் கூறும்போது 'துரதிர்ஷ்டவசமாக நான் 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்று விட்டேன், அது என்னுடைய தவறுதான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது நான் பிடெக் ஐடி இறுதி ஆண்டு படித்து வருகிறேன். பிடெக் படிப்பில் இதுவரை எனக்கு நல்ல சதவீத மதிப்பெண்கள் உள்ளன.
மதிப்பெண்கள்
இந்த நிலையில் எங்களுடைய கல்லூரிக்கு வேலைக்கு ஆள்கள் எடுக்க வரும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவர்களின் தகுதி அளவுகோல்கள் குறித்து பார்க்கும்போது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் இருக்க வேண்டும் என்றும் பொறியியல் துறையில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நேர்காணல்
நான் 10ஆம் வகுப்பில் 85 சதவீதமும் இன்ஜினியரிங் படிப்பில் 75% பெற்றாலும் 12-ம் வகுப்பில் 54% மட்டும் பெற்றதால் நான் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. லிங்க்ட் இன் இணையதளத்தில் வேலை தேடினாலும், எனது 12ஆம் வகுப்பு மதிப்பெண்ககளை பார்த்து என்னை நேர்காணலுக்கு அழைக்க மறுக்கின்றன.
பொறாமை
என்னுடைய வகுப்பு தோழர்கள் எல்லாம் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவதை நான் பொறாமையுடன் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
வாத விவாதங்கள்
இவருடைய பதிவை பார்த்து கல்லூரி படிப்பு முடித்த மாணவர் ஒருவரின் 10ஆம்வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது குறித்து வாத விவாதங்கள் சமூக வலைத்தளத்தில் நடைபெற்று வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் கருத்து
ஒரு இன்டர்நெட் பயனாளி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியபோது 'என் சகோதரனுக்கும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது என்றும், 10ஆம் வகுப்பில் அவருக்கு மதிப்பெண் குறைவாக இருந்ததால் அவர் பல நிறுவனங்களுக்கு இன்டர்வியூ அழைக்கப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போது அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைத்து விட்டது என்று அவர் கூறியுள்ளார்.
நிறுவனத்தை கண்டுபிடியுங்கள்
இன்னொரு நபர் இதுகுறித்து 'நீங்கள் இதனை ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம். எந்த நிறுவனமும் நேர்காணலின்போது 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை ஒரு பிரச்சனையாக பார்க்காது. உங்கள் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பொருட்படுத்தாமல் உங்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனத்தை நீங்கள் கண்டுபிடியுங்கள்' என்று பதிவு செய்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications