இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தனது இ கேட்டரிங் பிரிவின் மூலம் ரயில் பயணிகளுக்கு உணவுகளை வழங்குகிறது. இருப்பினும் தாங்கள் விரும்பும் உணவுகளை பெற முடியவில்லையே என்ற ஆதங்கம் ரயில் பயணிகளிடம் உள்ளது.
இனி அந்த கவலை ரயில் பயணிகளுக்கு இருக்காது. ரயில் பயணிகள் விரும்பும் உணவுகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ ரயில் பயணிகளுக்கு அவர்களுக்கு விருப்பமான உணவை வழங்க களம் இறங்குகிறது.

ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது பயணிகளுக்கு அவர்கள் விருப்பப்படும் உணவுகளை தேர்வு செய்யும் பரந்த வசதியை வழங்குவதற்காக சோமேட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, சோமேட்டோ உதவியுடன் தனது இ கேட்டரிங் வலைதளம் வாயிலாக ரயில் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவுகளை பெறும் Proof of Concept என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி செயல்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக புதுடெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், இ கேட்டரிங் பிரிவில், ரயில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்தவற்கான தேர்வுகளின் வரம்பை விரிவுப்படுத்தும் நோக்கில் சோமேட்டோவுடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது.
இ கேட்டரிங் வலைத்தளம் வாயிலாக மூலம் முன்கூட்டி ஆர்டர் செய்த உணவுகளை வழங்குவதற்கும், டெலிவரி செய்வதற்கும் சோமேட்டோவுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக புதுடெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்களில் ப்ரூப் ஆஃப் கான்செப்ட் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி-சோமேட்டோ கூட்டணி முயற்சி காரணமாக ரயில் பயணிகளின் பயண அனுபவம் புதிதாகவும், வசதியாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications