இன்றைய காலகட்டத்தில் ஓய்வூதிய திட்டங்கள் பல உள்ளன. மக்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் மற்ற எல்லா திட்டங்களையும் விட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) என்பது மிகச் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்புடன் வரிச்சலுகையும் கிடைக்கிறது. அதெல்லாம் சரி மற்ற திட்டங்களை காட்டிலும் எப்படி சிறந்தது.
வரிச்சலுகை என்ன? மற்ற திட்டங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
வரிச் சலுகை
பொதுவாக இந்த இபிஎஃப் திட்டத்தில் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. இதனால் தான் இந்த திட்டம் மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.50% ஆக உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் கூட்டு வட்டியும் கொடுக்கப்படுகிறது.
சலுகைகள்
இந்த திட்டத்தில் மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதமும் அதிகம். வரிச்சலுகையும் உண்டு. இதில் முதலீடு பெருக பெருக வட்டியும் அதிகமாக கிடைக்கும். மேலும் வேலையை மாற்றிய பிறகும் கூட, இதனை தொடர முடியும். எனினும் பிஎஃப் சந்தாதாரர்கள் அடிக்கடி இந்த நிதியினை இடையில் திரும்ப பெறுவதன் மூலம், இதில் கிடைக்கும் நன்மைகள் குறைகிறது.
வரி சலுகையுடன் பிஎஃப்
நீங்கள் இடையில் பணத்தை வித்டிரா செய்யாமல், ஓய்வூகாலத்திற்கு தொடரும்பட்சத்தில் உங்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. அதேசமயம் உங்கள் ஓய்வுகாலத்திற்கு கிடைக்கும் பணத்திற்கு வரிச்சலுகையையும் பெற முடியும்.
யார் தகுதியானவர்கள்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO )ஆல் நடத்தப்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டம் (EPF), ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உதவுகிறது. எனினும் குறைந்தபட்சம் பத்து வருடங்களாக EPF க்கு பங்களிப்பு செய்து வரும் ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் 58 வயதை எட்டும்போது, இந்த திட்டத்தில் மாத ஓய்வூதியத்தை உருவாக்கத் தொடங்குகிறது.
ஓய்வூதிய சேவை
தேவையான குறைந்தபட்ச சேவை காலத்திற்கு முன், அதாவது 10 வருடங்கள் சேவை செய்வதற்கு முன் ஒரு நபர் EPS திட்டத்திலிருந்து விலகினால், EPF திட்டத்திற்கான பங்களிப்பு புதுப்பிக்கப்பட வேண்டும். உறுப்பினரின் உண்மையான சேவை காலம் ஓய்வூதிய சேவை என்று அழைக்கப்படுகிறது. ஓய்வூதிய சேவை காலத்தை நிர்ணயிக்கும் போது, பல்வேறு நிறுவனங்களின் சேவை காலங்கள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. ஒரு ஊழியர் ஏற்கனவே இருக்கும் வேலையை மாற்றும்போது, அவர் ஒரு EPS திட்டச் சான்றிதழைப் பெற்று தனது புதிய நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications