EPFO விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி 100% வரை பணம் எடுக்கலாம்.. யாருக்கு கிடைக்கும்..?

ஊழியர்களின் அவசர தேவைகளுக்காக வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் தங்கள் தொகையில் 100 சதவீதம் வரை எடுக்கும் புதிய திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த சிபிடி கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களின் உடனடி நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதை எளிதாக்கும் வகையில், பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறைகளை மாற்றியமைக்கிறது.

நிறுவன ஊழியர்களின் நலனுக்காகப் பிடிக்கப்படும் நிதியே இபிஎஃப்ஓ (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) எனப்படும் பிஎஃப் ஆகும். இதில், ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12% பிடிக்கப்பட்டு, அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது.

EPFO விதிகளில் அதிரடி மாற்றம்.. இனி 100% வரை பணம் எடுக்கலாம்.. யாருக்கு கிடைக்கும்..?

நிறுவனத்தின் பங்களிப்பு 3 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. 3.67% இபிஎஃப்ஓ-க்கும், 8.33% ஊழியர் ஓய்வூதியத் திட்டத்துக்கும், சிறிய பங்கு இன்சூரன்ஸுக்கும் செல்கிறது. ஓய்வுபெறும் வயதில் ஊழியர்கள் இந்தத் தொகையை முழுமையாகத் திரும்பப் பெற முடியும்.

புதிய சீர்திருத்தத்தின்படி, அவசரத் தேவைகளுக்காகப் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இபிஎஃப் திட்டத்தில் இருந்த 13 சிக்கலான விதிகள் இப்போது 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியத் தேவைகள் (மருத்துவம், கல்வி, திருமணம்), வீட்டுத் தேவைகளின் போது, இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட 100% வரை பணத்தை எடுக்க முடியும்.

அதேபோல், பகுதியளவு நிதி எடுப்பதற்கான வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கல்விக்காகப் பணம் எடுக்கும் வரம்பு 10 மடங்காகவும், திருமணத்திற்கான வரம்பு 5 மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், திருமணம் மற்றும் கல்விக்கு மொத்தம் 3 முறை மட்டுமே பகுதியளவு பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. மேலும், பகுதியளவு பணம் எடுப்பதற்கான குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நெருக்கடியான சூழல்களில் பணம் எடுக்கும்போது, அதற்கான காரணங்களை சந்தாதாரர்கள் இனி விளக்க தேவையில்லை. இதற்கு முன்பு இயற்கை சீற்றங்கள், நிறுவனம் மூடல் அல்லது தொடர்ந்து வேலையின்றி இருப்பது போன்ற காரணங்களை அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இது சில சமயங்களில் நிராகரிக்க வழிவகுத்தது.

ஆனால், இந்த எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையால், உறுப்பினர் கணக்கில் 25% பங்களிப்பு குறைந்தபட்ச இருப்புத் தொகையாகப் பராமரிக்கப்படும். இது இபிஎஃப்ஓ வழங்கும் 8.25% வட்டி விகிதத்தைப் பெறவும், ஓய்வூதியத்திற்காக ஒரு பெரிய நிதியை உருவாக்கவும் உதவும்.

இந்த சீர்திருத்தம் ஆவணங்கள் எதுவும் தேவையில்லாமல் 100% தானியங்கி முறையில் பகுதியளவு பணம் எடுப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், இபிஎஃப்-ன் முதிர்வு பெறாத இறுதி செட்டில்மென்ட் எடுப்பதற்கான காலக்கெடு 2 மாதங்களில் இருந்து 12 மாதங்களாகவும், ஓய்வூதிய இறுதி செட்டில்மென்ட் காலக்கெடு 2 மாதங்களில் இருந்து 36 மாதங்களாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகள், உறுப்பினர்கள் தங்கள் உடனடி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு, ஓய்வூதிய சேமிப்பிலும் சமரசம் செய்யாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+