மாத சம்பளக்காரர்களுக்கு EPFO அமைப்பு விரைவில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பிஎஃப் (EPF) கணக்கில் உள்ள தொகையை அடுத்த சில மாதத்தில் ஏடிஎம் மூலமாகவோ அல்லது யூபிஐ மூலமாகவோ நொடிப்பொழுதில் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
இதுக்குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த வசதிகள் மார்ச் 2026க்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை மாத சம்பளக்காரர்கள் பெற வேண்டும் என்றால் பல படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கிறது. இது பலருக்கு பெரும் பிரச்சனையாகவும் தலைவலியாகவும் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வரையில் டிஜிட்டல் இந்தியாவில் பண பரிமாற்றத்தை எளிதாக்கும் பொருட்டு மத்திய தொழிலாளர் அமைச்சகம் பிஎஃப் தொகை எடுப்பதை எளிதாக்கி வருகிறது.
ஏற்கனவே பிஎப் உறுப்பினர்கள் அவசர தேவைக்கு 75 சதவீத தொகையை உடனடியாக எடுக்க முடியும். இப்போது ஏடிஎம் மற்றும் யூபிஐ வசதி வருவதால் இன்னும் எளிதாகும்.
முன்பு பிஎஃப் தொகையில் உறுப்பினரின் தங்களுடைய பங்களிப்பு மற்றும் அதன் வட்டி மட்டுமே எடுக்க முடியும் வகையில் விதிமுறைகள் இருந்து வந்தது. இந்த தொகையில் கூட 50 முதல் 100 சதவீதம் வரையிலான தொகையை பல்வேறு காரணத்தைப் பொறுத்து திரும்ப எடுக்கும் வாய்ப்பை கொடுத்து வந்தது.
இப்போது புதிய விதிமுறைப்படி ஊழியர் பணியாற்றும் நிறுவனம் பிஎப் கணக்கில் செலுத்தும் தொகையையும் சேர்த்து எடுக்கலாம். இதனால் 75 சதவீத தொகை எடுக்கும் போது கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஏடிஎம் வாயிலாகவும், யூபிஐ வாயிலாகவும் பணத்தை எடுக்கும் வாய்ப்பை வந்தால் சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications