ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி திட்டத்தை வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அப்படி பங்களிக்கும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும். எனவே இந்த ஆண்டு 8 சதவீதத்திற்கு அதிகமாக.. அதாவது 8.25% வரை வட்டி விகிதம் வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விகிதம், 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் EPFO அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. EPFO அமைப்பின் கீழ் அதிக முதலீடுகள் சேர்ந்த காரணத்தினாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினாலும் இந்த நிதியாண்டு நல்ல ஒரு நிதியாண்டாக அமைந்தது. ஆனால் உறுப்பினர்களால் அதிக உரிமை கோரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிதி வெளியேற்றமும் ஏற்பட்டது.

EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் 5 கோடிக்கும் அதிகமான PF கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனையின் மதிப்பு 2.5 லட்சம் கோடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2024-ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 1.82 லட்சம் கோடி மதிப்புடைய 4.45 கோடி கோரிக்கைகளுடன் ஒப்பிடும்போது இந்த நிதி ஆண்டில் சற்று அதிகமான நிதி வெளியேற்றம் காணப்பட்டது. அதாவது பிஎஃப் பணத்தை எடுத்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
EPFO அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரங்காவலர் குழுவிடம் (சிபிடி) pf தொகை வட்டி விகிதத்தை முன்மொழியும். அதன் பிறகு அறங்காவலர் குழுவின் ஒப்புதல் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்கு மேல் இருந்தால் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் தேவை. இந்த விகிதம் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இபிஎப் உறுப்பினர்களின் கணக்குகளில் அவை வரவு வைக்கப்படும்.
வழக்கமாக ஒரு ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் இந்த செயல்முறை நடத்தப்படும். கடந்த ஆண்டு மொத்த அசல் தொகையாக சுமார் 13 லட்சம் கோடிக்கு 8.25% வட்டி வழங்கப்பட்டது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும். சிபிடி EPFO அமைப்பின் சட்டதிட்டங்களை நிர்வகிக்கும் ஒரு குழுவாகும். இதில் அரசாங்க பிரதிநிதிகள் குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், நிறுவனர்கள் ஆகியோர் இருப்பர். இந்த ஆண்டும் இதே போல அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு EPFO உறுப்பினர்களிடையே நிலவி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications