ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்குப் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு அமைப்பாக விளங்கும் EPFO அக்டோபர் 19 தேதி வெளியிட்ட அறிக்கையில் தனது அனைத்து குரூப் 'சி' மற்றும் குரூப் 'பி' ஊழியர்களுக்கும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இந்தப் போன்ஸ் அறிவிப்பு மூலம் EPFO அமைப்பின் ஊழியர்கள் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) தொகையாக அதிகப்படியாக 13,806 ரூபாய் அளவிலான தொகையை அளிக்க உள்ளது.
EPFO அமைப்பு
2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு, உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் தொகை அதிகப்படியாக 60 நாட்கள் ஊதியத்திற்குச் சமமான தொகையைப் போன்ஸ் ஆக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
13,806 ரூபாய்
இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்கள் 13,806 ரூபாய் அளவிலான தொகையைப் போனஸ் ஆகப் பெற உள்ளனர். இது EPFO ஊழியர்களுக்குத் தீபாவளிக்குக் குட்நியூஸ் ஆக மாறியுள்ளது.
PLB கணக்கீடு
குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவில் இருக்கும் ஒரு தகுதியான பணியாளர், இந்தப் பார்முலா படி உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் தொகையைப் பெறுவார்கள். அதாவது ஒரு ஊழியரின் சராசரி ஊதியங்கள் x போனஸ் நாட்களின் எண்ணிக்கை / 30.4 அதன் அடிப்படையில் தான் போனஸ் கிடைக்கும்.
PLB முன்பணம் செலுத்தும் தேதி
2021-22 ஆம் ஆண்டிற்கான PLB க்கு எதிரான முன்பணத் தொகையை அக்டோபர் 20, 2022 க்குள் தகுதியான ஊழியர்களுக்குச் செலுத்தப்படலாம் என EPFO தெரிவித்துள்ளது.
பிஎப் வட்டி தொகை
மத்திய அரசு அறிவித்தது படி 2022 ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க உள்ள நிலையில் பிஎப் கணக்கில் 10 லட்சம் ரூபாய் வைத்துள்ளவர்களுக்கு 81000 ரூபாய் அளவிலான வட்டி தொகையைப் பெற உள்ளனர். இதுவே பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications