ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் 7.6 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் EPFO அமைப்பு தற்போது ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இனி எந்த ஒரு நிறுவனத்தின் சரிபார்ப்பு செயல்முறையும் இல்லாமல் மற்றும் EPFO அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை ஊழியர்கள் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
அதோடு மேலும் ஒரு சிறப்பம்சமாக EPF டிரான்ஸ்ஃபர் செயல்முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறும்போது EPF பணத்தை மாற்றுவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஆதார் ஒடிபி-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் எளிதில் EPF ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை இந்த இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தினார். EPFO அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதால் அவ்வப்போது பெயர் மாற்றம் செய்யும்போது மற்றும் ஈபிஎப் ட்ரான்ஸ்ஃபர் செய்யும்போது சில பிரச்சினைகள் எழும்.
இந்தப் பிரச்சினைகளில் 27 சதவீதம் உறுப்பினரின் விவரங்கள் மற்றும் கேஒய்சி சம்பந்தமான பிரச்சினைகளாகும். எனவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இது போன்ற பிரச்சனைகள் அதிக அளவில் குறையும் என்றும் மண்டவியா தெரிவித்திருக்கிறார். அதோடு அதிக அளவிலான ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த புதிய வசதியினால் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் உறுப்பினர்களுக்கு தங்கள் தனிப்பட்ட விவரங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்துவதற்கு EPFO ஒப்புதல் மற்றும் முதலாளியின் சரிபார்ப்பு தேவைப்பட்டது. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம் 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு UAN நம்பர் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் தாங்களாகவே தங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை திருத்திக் கொள்ளலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த ஆதார ஆவணமும் தேவையில்லை.
ஆனால் ஆதார் இணைக்கப்படாத கணக்குகளாக இருந்தால் திருத்தம் செய்ய முதலாளியிடம் நேரடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு இபிஎப்ஓ-வின் ஒப்புதலுக்கு அவை அனுப்பப்படும்.
ஆனால் ஒரு ஊழியரின் UAN பதிவை பணியமர்த்தப்படும் போது நிறுவனங்களே செய்திருந்தால் அப்போது சில பிழைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உதாரணமாக தந்தை பெயர், மனைவி பெயர், திருமண நிலை மற்றும் பிற விவரங்களை பதிவு செய்வதில் தவறுகள் ஏற்படலாம். இப்படி பிழைகள் ஏற்பட்டால் ஊழியர் ஆவணங்களுடன் ஆன்லைனில் கோரிக்கை வைக்க வேண்டும். இதனை முதலாளி சரிபார்த்து அதன் பிறகு மாற்றத்தை இபிஎப் அமைப்பிற்கு அனுப்ப வேண்டும்.
2025-ஆம் நிதியாண்டில் முதலாளிகளால் 40% கோரிக்கைகள் EPFO அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் 40 சதவீத கோரிக்கைகள் ஐந்து தினத்திற்குள், 47 சதவீத கோரிக்கைகள் 10 தினத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் முதலாளிகள் எடுத்துக் கொண்ட சராசரி நேரம் 28 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆதார் ஒடிபி அடிப்படையிலான பெயர் திருத்தம் மற்றும் பிற விவரங்களை திருத்துவதற்கான அம்சம் 45 சதவீத ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications