ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) ஒரு நபர் நிறுவனத்தில் பணி புரியும் வரை அவருடைய முதலாளி மற்றும் பணிபுரியும் ஊழியர் இருவரும் சேர்ந்து மாத மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் அந்த ஊழியர் கணிசமாக சேமிக்க முடியும். EPF திட்டத்திற்கு 8.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. EPFO விதிகளின்படி, தொழிலாளி தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12% தொகையை EPF-இல் செலுத்த வேண்டும். தொழிலாளியின் பங்கை சமன்ப்படுத்த முதலாளியும் 12% தொகையை செலுத்த வேண்டும். இதில் 8.33% EPS-க்கும், 3.67% EPF-க்கும் செலுத்தப்படும்.
இப்படி சேர்த்து வைத்த தொகையை பெறுவதில் சிலர் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து சிலர் தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

பொதுவாக ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது இந்த இபிஎப் தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக வருங்கால வைப்பு நிதி கார்பஸில் பகுதி அளவு தொகையை எடுத்துக் கொள்ள முடியும். இந்த தொகை உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஆனால் அதற்கு குறைந்தது 10 நாட்கள் வரை எடுக்கலாம். இது தவிர உங்களுடைய கோரிக்கை பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுவதற்குவாய்ப்புண்டு.
உங்கள் கோரிக்கை ஏன் EPFO அமைப்பால் நிராகரிக்கப்படுகிறது?: உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுய்வதற்கான பொதுவான காராணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையற்ற KYC
ஆதாருடன் UAN நம்பரை இணைக்காமல் இருத்தல்
பெயர், பிறந்த தேதியில் மாற்றங்கள்
EPFO பதிவுகளுடன் UAN நம்பர் பொருந்தாமல் இருத்தல்
நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறும் தேதி சரியாக இல்லாமை
தவறானநிறுவனத்தின் பெயர், குறியீடு மற்றும் இதர விவரங்கள்
தவறான வங்கி கணக்கு விவரங்கள். உதாரணமாக கணக்கு எண், IFSC குறியீடு, கிளை பெயர்
உரிமைகோரல் சமர்ப்பிக்கும் படிவத்தில் பிழைகள்
தகுதியற்ற EPS கணக்கு (மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.15,000க்கு மேல்)
மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக உங்களுடைய EPF கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அவற்றை எப்படி சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.
EPFO பதிவுகளுக்கும் உங்கள் ஆதார் தகவல்களுக்கும் இடையில் ஏதேனும் பொருந்தாத விவரங்கள் உள்ளதா? என்பதைச் சரி பறக்கவும்.
ஆதாருடன் UAN நம்பரை இணைக்கவும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
PF பரிந்துரைகளை புதுப்பிக்கவும். ஏதேனும் பிழைகள் உள்ளதா என உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
உங்கள் உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உன்னிப்பாக அனைத்து தகவல்களையும் மதிப்பாய்வு செய்யவும். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் பராமரிக்கவும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications