இந்திய தொழிலாளர்களுக்கு முக்கியமான நலத்திட்டமான Provident Fund (PF) திட்டத்தை EPFO எனப்படும் Employees Provident Fund Organization என்ற அரசு அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த அமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் PF உறுப்பினர் சேர்க்கை தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. தற்போது வெளியான 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கான புள்ளி விவரங்கள், நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை தெளிவாக காட்டுகிறது. மேலும் இளைய தலைமுறையின் பங்கு மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பு பற்றிய முன்னேற்றமும் இதில் பிரதிபலிக்கின்றது.
2025 மார்ச் மாதத்தில் மட்டும் EPFO புதிய புள்ளி விவரங்களின்படி 14.58 லட்சம் பேர் PF-ல் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 1.15% அதிகம் ஆகும். இந்த நிலைமை வேலைவாய்ப்புகள் உயரும் பாதையில் செல்கின்றன என்பதையும், மக்கள் நலத்திட்டங்களைப் பற்றி அதிகம் விழிப்புணர்வுடன் இருப்பதைவும் காட்டுகிறது. இந்த மாதம் 7.54 லட்சம் புதிய நபர்கள் முதன் முறையாக PF திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது பிப்ரவரி மாதத்தை விட 2.03% அதிகம் மற்றும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 0.98% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக PF-இல் இருந்து வெளியேறிய 13.23 லட்சம் பேர், தற்போது மீண்டும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். பிப்ரவரியுடன் ஒப்பிட்டால் இது 0.39% அதிகம். இது மீண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் நம்பிக்கை அதிகரிக்கிறது. மார்ச் மாதத்தில் 2.08 லட்சம் பெண்கள் PF-ல் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இது பிப்ரவரியை விட 0.18% அதிகம், மற்றும் கடந்த ஆண்டு மார்ச்சை விட 4.18% அதிகம் ஆகும். இது பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிப்பதை வெளிப்படுத்துகிறது.
EPFO புள்ளிவிவரங்களின் படி, 4.45 லட்சம் இளைஞர்கள் (18-25 வயது) PF திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது மார்ச் மாதத்தில் சேர்ந்தவர்களில் 58.94% ஆகும். பிப்ரவரியுடன் ஒப்பிட்டால் 4.21% மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 4.73% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், 18-25 வயதினருக்கான மொத்த நிகர சேர்க்கை மார்ச் மாதத்தில் 6.68 லட்சம் என பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 6.49% அதிகம் ஆகும்.
பட்டியல் செய்து பார்க்கையில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமான 20.24% புதிய PF உறுப்பினர்களை சேர்த்துள்ளது. அதன் பின்னர் தமிழ்நாடு, கர்நாடகம், ஹரியானா, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும், ஒவ்வொன்றும் 5% க்கும் மேல் பங்கு வகித்துள்ளன. மொத்த சேர்க்கையின் 59.67% இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்துள்ளது.
மார்ச் மாதத்தில் EPFO-வில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் சுமார் 45.59% பேர் மனிதவள ஒப்பந்த நிறுவனங்கள், பாதுகாப்பு சேவைகள், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பிற பொதுத்துறை சேவைகள் போன்ற துறைகளில் இருந்து வந்துள்ளனர். இந்த துறைகள் தற்போது வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாக இருந்து, நாட்டில் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கின்றன
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications