ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து தங்கள் உறுப்பினர்களுக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் EPF பணம் எடுப்பதிலும் தற்போது சில மாற்றங்கள் வரவுள்ளன. இதற்கு முன்னர் இபிஎப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது உங்கள் வங்கி கணக்கு சரியானதா? என உறுதிப்படுத்த சில ஆவணங்கள் தேவைப்பட்டன.
குறிப்பாக உங்கள் பெயர் அச்சிடப்பட்ட செக் புத்தகம் அல்லது வங்கி அதிகாரி கையெழுத்திட்ட பாஸ்புக் தேவைப்படும். அதோடு உங்கள் வங்கி கணக்கை உங்கள் இபிஎப் கணக்குடன் இணைக்க நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி அனுமதி தேவைப்பட்டது. இப்போது அரசு இந்த இரண்டு நடைமுறைகளையும் எளிதாக்கியுள்ளது.

EPF கிளைம் செயல்முறை நிராகரிக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை சிக்கலானதாகவும் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக கஸ்டடியன் டாட் லைப்-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குணால் கப்ரா கூறியுள்ளார்.
அதோடு ஏற்கனவே வங்கியில் KYC கட்டாயத் தேவையாக இருப்பதால் உரிமை கோரலின் போது காசோலை வழங்குவது தேவையற்ற செயல் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் கேஒய்சி சரிபார்ப்பு செய்யும்போதே வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் சரிபார்க்கப்படும். EPF பணத்தை எடுக்கும் போது ஏற்கனவே கேஒய்சி சரிபார்ப்பு முடிந்த வங்கி கணக்கை வைத்திருந்தால் எளிதாக பணம் பெறலாம். இது தேவையற்ற பணிச்சுமையை குறைக்க உதவும்.
தற்போது இந்த சரிபார்ப்பு செயல்முறை நீக்கப்படுவதால்.. இதனால் மோசடிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. எனவே EPFO அமைப்பு தனது உறுப்பினர்களின் பணத்தை பாதுகாக்க புதிய செயல் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் கப்ரா கூறியுள்ளார்.
EPFO அமைப்பு வங்கி கணக்கையும், UAN நம்பரையும் சரிபார்க்க NPCI தளத்தைப் பயன்படுத்தி வருகிறது. NPCI இந்தியாவில் பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி கணக்கு பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு அமைப்பு. இதன் மூலம் வங்கி கணக்கு சரியாக உள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்க முடியும்.
இந்த சரிபார்ப்பு வங்கி கணக்கு மற்றும் UAN ஆகிய இரண்டும் ஒரே நபருக்கு உரியதா? என்பதை உறுதிப்படுத்தும். எனவே EPFO அமைப்பு உறுப்பினர்களின் பணம் மோசடியாக வெளியேறாமல் பாதுகாக்க ஒரு வலுவான செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications