2022ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 5ஜி மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்வீடன் நாட்டின் தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் கூறியுள்ளது.
சீனா மற்றும் வட அமெரிக்காவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு உள்பட பல காரணங்களால் உலகில் உள்ள பல நாடுகளில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளது. இருப்பினும் 5ஜி மொபைல் சேவைக்கு உலகளாவிய மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், 5ஜி தொழில்நுட்பத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் சார்பில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பம்
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 620 மில்லியன் மொத்த சந்தாதாரர்கள் உள்ளனர். அதேபோல் 4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 4.9 பில்லியனாகவும் உள்ளது.
எண்ணிக்கை
5ஜி தொழில்நுட்பம் இன்றைய தலைமுறையினர்மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெறும், எனவே ஆச்ச்சரியப்படும் வகையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.
2025ல் 4.4 பில்லியன்
இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் 4.4 பில்லியனைத் தாண்டும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி தொழில்நுட்பம்
அதேபோல் 5ஜி தொழில்நுட்பம் வருகை காரணமாக 4ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இருக்காது என்றாலும் 4ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 4ஜி தொழில்நுட்பம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் கழித்தே ஒரு பில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ள நிலையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமான ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் இலக்கை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை குறையும்
மேலும் டெலிபோன் ஆபரேட்டர் மற்றும் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் விலையை குறைக்க வழிவகை செய்து வருகிறார்கள் என்பதும் இதுவும் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி
5ஜி அலைக்கற்றை ஏலத்தை இந்தியா இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள 5ஜி சந்தாதாரர்களின் வளர்ச்சி எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி எதிர்காலம்
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 30 மில்லியன் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும், அதுவே 2023 ஆம் ஆண்டு 50 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications