2022ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் 5ஜி மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஸ்வீடன் நாட்டின் தொலைத்தொடர்பு உபகரண தயாரிப்பு நிறுவனமான எரிக்சன் கூறியுள்ளது.
சீனா மற்றும் வட அமெரிக்காவில் 5ஜி சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு உள்பட பல காரணங்களால் உலகில் உள்ள பல நாடுகளில் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளது. இருப்பினும் 5ஜி மொபைல் சேவைக்கு உலகளாவிய மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றும், 5ஜி தொழில்நுட்பத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் சார்பில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி தொழில்நுட்பம்
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 620 மில்லியன் மொத்த சந்தாதாரர்கள் உள்ளனர். அதேபோல் 4ஜி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 70 மில்லியன் அதிகரித்து 4.9 பில்லியனாகவும் உள்ளது.
எண்ணிக்கை
5ஜி தொழில்நுட்பம் இன்றைய தலைமுறையினர்மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெறும், எனவே ஆச்ச்சரியப்படும் வகையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.
2025ல் 4.4 பில்லியன்
இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை வரும் 2025 ஆம் ஆண்டில் 4.4 பில்லியனைத் தாண்டும் என தொழில் நுட்ப வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4ஜி தொழில்நுட்பம்
அதேபோல் 5ஜி தொழில்நுட்பம் வருகை காரணமாக 4ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இருக்காது என்றாலும் 4ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 4ஜி தொழில்நுட்பம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் கழித்தே ஒரு பில்லியன் சந்தாதாரர்களை பெற்றுள்ள நிலையில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமான ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் இலக்கை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை குறையும்
மேலும் டெலிபோன் ஆபரேட்டர் மற்றும் மொபைல் போன் தயாரிப்பாளர்கள் விலையை குறைக்க வழிவகை செய்து வருகிறார்கள் என்பதும் இதுவும் 5ஜி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5ஜி
5ஜி அலைக்கற்றை ஏலத்தை இந்தியா இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள 5ஜி சந்தாதாரர்களின் வளர்ச்சி எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி எதிர்காலம்
2022ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 30 மில்லியன் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்றும், அதுவே 2023 ஆம் ஆண்டு 50 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications