இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்குப் பின்பு மிகப்பெரிய இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தமாக எஸ்ஸார் குழுமம் தனது மிகப்பெரிய துறை மற்றும் இதர பல சொத்துக்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் முக்கியமான வர்த்தகத்தை இந்தியாவில் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் மற்றும் எஸ்ஸார் குழுமம் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எஸ்ஸார் குழுமம்
எஸ்ஸார் குழுமத்திற்குச் சொந்தமான சில துறைமுகங்கள் மற்றும் மின் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல்
இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் "மிகப் பெரிய தொற்றுநோய் பிந்தைய இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்" ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. எஸ்ஸார் குழுமம் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் நிறுவனம் சுமார் 2.4 பில்லியன் டாலர் (ரூ. 19,000 கோடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
LNG முனையம்
இந்த ஒப்பந்தம் மூலம் குஜராத் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 MTPA LNG முனையத்தை எஸ்ஸார் குழுமம் மற்றும் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் 50:50 கூட்டணியில் அமைக்க உள்ளது.
எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், எங்களின் முதலீடுகளுக்குப் பல மடங்கு லாபம் கிடைக்கும், எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் உண்மையான பலன்களை அளிக்க உள்ளது. மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் புதிய மற்றும் நவீன அடிப்படை கட்டமைப்புச் சொத்துக்களை உருவாக்குவதில் தொடர்ந்து நிறுவனம் கவனம் செலுத்தும் என்று எஸ்ஸார் போர்ட்ஸ் & டெர்மினல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரேவந்த் ரூயா கூறினார்.
கடன்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரூயா நடத்தும் எஸ்ஸார் நிறுவனம் அதன் திட்டமிட்டபடி சொத்துக்களைப் பணமாக்கும் பணிகளை முடித்துள்ளது. மேலும் இந்திய வங்கித் துறையில் வைத்திருந்த $25 பில்லியன் (ரூ. 2,00,000 கோடி) கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications