சென்னை: மருத்துவ செலவுகள் நமது மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில் தவிர்க்க முடியாத ஒன்று. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு தினமும் மருந்து மாத்திரை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை என்பது இந்திய குடும்பங்களில் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் மருந்து செலவுகளுக்கு என நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டி இருக்கிறது.
ஆனால் நாளை முதல் அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர இருப்பதால் நாம் மருத்துவ செலவுகளுக்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2024,ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் வலி நிவாரணி உள்ளிட்ட 800க்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர இருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்த சோகையை எதிர்க்கும் மருந்துகள், விட்டமின் மாத்திரைகள் மற்றும் கோவிட் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளின் விலை நாளை முதல் உயர இருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அண்மையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளித்தது. இதன்படி மருந்துகளின் விலை 0.0055% அதிகரிக்க இருக்கிறது.
ஹோல்சேல் பிரைஸ் இண்டக்ஷன் குறிப்பிட்டுள்ளபடி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இருக்கும் மருந்துகளின் விலை 0.0055% உயர்ந்து ஏப்ரல் 1 முதல் அது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருந்து விலை ஏற்றமானது கடந்த ஆண்டுகளை விட மிக குறைவாகும்.
முந்தைய ஆண்டுகளில் இந்த மருந்துகளின் விலையானது 10 முதல் 12 % வரை உயர்த்தப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் மருந்துகளின் விலையை உயர்த்த வேண்டுமென மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. ஆனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்தன.
நடப்பாண்டில் மருந்துகளின் விலை உயர்வு பெரிய அளவில் இல்லை என்றாலும் அன்றாடம் மருந்து உட்கொள்ளப்பவர்களுக்கு ஒட்டுமொத்தமாக இது கூடுதல் செலவையே ஏற்படுத்தும்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications