ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி.. சந்தா கோச்சார், தீபக் கோச்சார் கைது..!

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்த, சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சந்தா கோச்சார் செயல்பட்டு வந்த போது, அவருடைய பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி எந்த வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு 3250 கோடி ரூபாய் கடன் வழங்கினார்.

மோசடியாக கடன்

மோசடியாக கடன்

அந்த கடன் தொகை சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்தி வந்த நுபுவர் ரெனிவபிள் நிறுவனத்தில் பல தவணைகளாக, அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு வீடியோகான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட கடன் வசூலாகாத நிலையில் அதனை வாராக் கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சந்தா கோச்சாவின் கணவருக்கு பணம்

சந்தா கோச்சாவின் கணவருக்கு பணம்

இந்த பணம் பல தவணைகளில் மீண்டும் சந்தா கோச்சாரின் கணவருக்கே அளிக்கப்பட்டுள்ளது வெட்ட வெளிச்சமாகிய நிலையில் தான் இந்த கைது நடவடிக்கையானது நடந்துள்ளது. சந்தா கோச்சாரின் கணவர், வீடியோகான் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உள்பட சில அதிகாரிகள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

சில ஆண்டுகளாக வழக்கு

சில ஆண்டுகளாக வழக்கு

இந்த வழக்கு 2019ம் ஆண்டே பதியப்பட்ட நிலையில், அவரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான சொத்துகளையும் அமலாக்க துறையானது முடக்கியது. இந்த நிலையில் தான் சந்தா கோச்சாவும் அவரது கணவருடன் சிபிஐ வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பதவியில் இருந்து விலகினார்

பதவியில் இருந்து விலகினார்

ஐசிஐசிஐ வீடியோகான் கடன் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தா கோச்சார், சனிக்கிழமை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 59 வயதான சந்தா கோச்சார் அக்டோபர் 2018ல் பதவியில் இருந்து விலகினார்.

எவ்வளவு சொத்து?

எவ்வளவு சொத்து?

முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ மற்றும் தலைவரான சாந்தா கோச்சார் மொத்தம் ரூபாய் 24 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்டினை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு இந்த சொத்தின் மூலம் அவருக்கு ஒவ்வொரு வருடமும் 5.5 கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் சிபிஐ கண்டு பிடித்துதுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடம்பர பொருட்கள்

ஆடம்பர பொருட்கள்

2011ம் ஆண்டு மும்பையில் சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களா ஒன்றை வாங்கினார் என்றும் கூறப்படுகிறது. இது மட்டும் அல்ல இன்னும் ஏராளமான ரியல் எஸ்டேட்டுக்கு சொத்துக்களை வாங்கி போட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இவர்களிடன் மிக உயர்ந்த விலையுள்ள சொகுசு கார்கள் பலவும் இருப்பதாகவும், குறிப்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளிட்ட சில கார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலீடு

முதலீடு

பல்வேறு துறைகளில் சாந்தா கோச்சார் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும், அவரது தனிப்பட்ட முதலீடுகள் மட்டும் சுமார் 14 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+