முன்னாள் இராணுவ வீரர்களுக்கு பென்ஷன் திடீர் நிறுத்தம்.. தொடரும் சர்ச்சை!

முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30-ம் தேதிகளில் பென்ஷன் வழங்கப்படும். ஆனால் பலருக்கு ஏப்ரல் மாத்திற்கான பென்ஷன் இதுவரையில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

எந்த அறிவிப்பு இல்லாமல் நிறுத்தம்

எந்த அறிவிப்பு இல்லாமல் நிறுத்தம்

ஏப்ரல் மாதத்திறக்கான பென்ஷன் வரவில்லை என்ன கூறும் சில இராணுவ வீரர்கள், எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளது. தேசத்துக்காக உழைத்ததற்கு இது தான் கைமாறா? பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பு

புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பு

முன்னாள் இராணுவ வீரர்களின் இந்த பென்ஷன் சர்ச்சைக்கு, புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பிற்கு ராணுவம் மாறியுள்ளதே காரணம். இராணுவ வீரர்களுக்கு பென்ஷன் வழங்குவதிலிருந்த பிரச்சனையைக் கலைந்து சரி செய்யவே புதிய பென்ஷன் வழங்கல் அமைப்பிற்கு இராணுவம் மாறியுள்ளது. அதில் சில பிழைகள் ஏற்பட்டுள்ளது தான் இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு காரணம். விரைவில் அது சரி செய்யப்படும் என ராணுவ அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

 ஆயுள் சான்றிதழ்

ஆயுள் சான்றிதழ்

பாதுகாப்புத் துறையின் கணக்குகள் துறையிடம் இது குறித்து விசாரித்த பொது, பல முன்னாள் இராணுவ வீரர்கள் ஏப்ரல் மாதம் பென்ஷன் பெற ஆயுள் சான்றிதழ் சாரப்பிக்க வேண்டும். மார்ச் மாதம் பென்ஷன் அறிக்கையில் அதுபற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை கவனித்துச் செய்யாதவர்களுக்கு எல்லாம் பென்ஷன் அனுப்பவில்லை என தெரிவித்தனர்.

 முன்னாள் இராணுவ வீரர்கள்

முன்னாள் இராணுவ வீரர்கள்

ஆனால் பென்ஷன் வராத முன்னாள் இராணுவ வீரர்கள், நவம்பர் மாதம் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்தோம். அதற்குப் பிறகு எங்களுக்கு அதுகுறித்த தகவல் எதுவும் தேரவிக்கவில்லை. அதுவும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெற்ற பலருக்கு பென்ஷன் வரவில்லை என கூறுகின்றனர்.

 முதல்முறை அல்ல

முதல்முறை அல்ல

பிப்ரவரி மாதமும் இதே போன்று பென்ஷனில் அகவிலைப்படி இல்லாமல் வந்தது. சில ஓய்வு பெற்ற பெண் அதிகாரிகள் பென்ஷன் வரவில்லை எனவும் புகார் தெரிவித்து இருந்தனர்.

அரசு

அரசு

புதிய பென்ஷன் அமைப்பை 160 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளனர். இதனால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+