2000 ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமா.. SBI சொன்ன குட்நியூஸ்..!

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் அனைவரும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றும் பணிகளுக்கு தயாராகி வருகின்றனர், ஒருபக்கம் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இல்லை என கூறப்பட்டாலூம் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக வங்கி கிளைகளை கொண்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அனைத்து வங்கி கிளைகளுக்கும் ஒரு முக்கியமான அறிக்கையை மே 20 ஆம் தேதி அனுப்பியது. இந்த அறிக்கையில் கொடுத்த விதிமுறைகள் 2016 பணமதிப்பிழப்பு காலக்கட்டத்தில்ல எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஒப்பிடுகையில் தலைகீழாக உள்ளது.

2000 ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமா.. SBI சொன்ன குட்நியூஸ்..!

2016ல் இந்தியா முழுவதும் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தொகையை மாற்றவும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் பல நாட்கள் வங்கியில் காத்திருந்தனர், இதில் பலர் உயரிழந்த சம்பவமும் நடந்தது. இந்த வேளையிலும் வங்கி கிளையில் படிவம் நிரப்பி, அடையாள அட்டை காட்டிய பின்பு தான் பணத்தை மாற்றப்பட்டது. ஆனால் தற்போது எஸ்பிஐ கொடுத்துள்ள அறிவிப்பு முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது.

மே 20 ஆம் தேதி எஸ்பிஐ வங்கி கிளைகளுக்கு அனுப்பிய அறிவிப்பில், மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் சேவைக்கு எவ்விதமான படிவமும், எவ்விதமான அடையாள அட்டையும் பெற தேவையில்லை என அறிவித்துள்ளது. இதனால் 2000 ரூபாய் வைத்துள்ள மக்கள் டெபாசிட் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை, எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சுமார் 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது, இது மொத்த பண புழக்கத்தில் 10.8 சதவீதமாகும். வங்கிகள் இந்த மொத்த தொகையும் டெபாசிட் ஆக பெறுவதற்கு வாய்ப்பு இல்லை, 50000 கோடி முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகை டெபாசிட் ஆக பெறும், மீதமுள்ள தொகை சந்தைக்கு திரும்பும் என கணிக்கப்பட்டு உள்ளது.

2000 ரூபாய் நோட்டை மாற்ற வேண்டுமா.. SBI சொன்ன குட்நியூஸ்..!

ஆனால் எஸ்பிஐ 2000 ரூபாய் நோட்டுகளை பெற எவ்விதமான படிவமும், அடைய அட்டையும் தேவையில்லை என கூறிய நிலையில் டெபாசிட் தொகை எதிர்பார்ப்புகள் குறைந்துள்ளது. நாட்டின் பணப்புழக்கம் பாதிக்க கூடாது என்பதற்காகவும், வங்கியில் எவ்விதமான ஆப்ரேஷனல் பிரச்சனை வர கூடாது என்பதற்காகவும் எஸ்பிஐ வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது.

மக்கள் அனைவரும் வங்கிகளில் மே 23 ஆம் தேதி முதல் ஒரு முறை 20000 ரூபாய் வீதம் ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். எஸ்பிஐ வங்கி கொடுத்த விதிமுறையை பிற வங்கிகளும் பின்பற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+