இன்னும் 10 ஆண்டுகளில் டிரில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ச்சி காணலாம் என மூன்று நிறுவனங்களை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதென்ன நிறுவனங்கள், எந்த துறை சார்ந்த நிறுவனங்கள்? இதனை ஏன் வாங்கலாம்? நிபுணர்களின் கருத்து என்ன?
இது குறித்து மார்செல்லஸ் முதலீட்டு மேலாளர்களின் நிறுவனர் சவுரப் முகர்ஜி என்ன கூறியுள்ளார், வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன நிறுவனங்கள்?
டிசிஎஸ்
ஹெச் டி எஃப் சி வங்கி
டைட்டன்
டிசிஎஸ் மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கிகள் பாதுகாப்பான பங்குகளாகும். ஏற்கனவே இந்த பங்குகள் 100 பில்லியன் டாலர்களுக்கு அருகே உள்ளன. எனவே இது மிக கடினமாக இருக்காது.
டைட்டன்
டைட்டன் நிறுவனம் 50 பில்லியன் டாலர் நிறுவனமாகும். இது இன்னும் 20 வருடத்திற்கு நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 30% ஏற்றம் கண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கேஸ் ப்ளோ மற்றும் மார்ஜின் விகிதங்கள் நன்றாக உள்ளன. இதன் காரணமாக இன்னும் நல்ல வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச் டி எஃப் சி வங்கி
ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஹெச் டி எஃப் சி இணைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், அதன் வளர்ச்சி விகிதம் இன்னும் தாறுமாறாக ஏற்றம் காணலாம். இவ்வாறு இணைக்கப்படும்போது 2வது பெரிய நிறுவனமான உருவெடுக்கலாம். இதற்கிடையில் இவ்வங்கி பங்கின் விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் நிபுணர்கள் கூறியிருக்கலாம்.
டிசிஎஸ்
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், மிகப்பெரிய ஐடி சேவை வழங்குனராகும். ஐடி துறையில் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களை போட்டு வருகின்றது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்பங்கினை நிபுணர்கள் பரிந்துரை செய்திருக்கலாம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications