சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து பரவி வந்தது. தொடர்ந்து இது குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.
ஆனால் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக கூறி வெளியாகி வரும் அறிவிப்புகள் பொய்யானவை என செலவினத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து PIB Fact check தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. செலவினத் துறை அப்படி ஏதும் அறிவிப்பினை வெளியிடவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
இது உண்மை அல்ல
இது குறித்து இணையத்தில் சுற்றி வரும் ஆர்டர் உண்மையான ஆர்டர் போன்றே உள்ளது. மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜுலை 1, 2022 முதல் அகவிலைப்படி 34%ல் இருந்து, 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையான ஆர்டர் அல்ல.
பொய்யான அறிக்கை
இந்த ஆர்டரில் 7 பாயிண்டுகள் கொடுத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் நிர்மலா தேவ் என செலவினத் துறை இயக்குனரின் கையெழுத்தும் உள்ளது. பார்ப்பதற்கு உண்மையான அறிக்கை போன்றே தோன்றினாலும் இது ஒரு பொய்யான அறிவிப்பு என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
PIB busted?
PIB busted என்பது பொது தகவல் பணியகத்தில் உண்மை சரிபார்ப்பு பிரிவாகும். இது அரசாங்க கொள்கைகள் பற்றிய போலி அறிவிப்புகள் குறித்து உண்மையை தன்மையை ஆராய்ந்து வெளியிடும். இதன் மூலம் தவறுகளை தடுத்தும் வருகின்றது. குறிப்பாக அரசின் திட்டங்கள் குறித்து ஏராளமான பொய்யான தகவல்கள் அவ்வப்போது இதுபோன்று இணையத்தி பரவி வருவதுண்டு. ஆக இதுபோன்ற பொய்யான பரப்புரைகளை தடுக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
பொய்யான செய்திகள்
இது அரசு திட்டங்கள், அறிவிப்புகளில் மட்டும் அல்ல, செய்திகளிலும் பொய்யான செய்திகளை கண்டறிந்து ஆய்வு செய்கிறது. இது பொய்யான தகவல்களை பரப்பியோர் மீதும் நடவடிக்கை எடுக்கிறது.
இதற்கிடையில் செப்டம்பர் 1 முதல் அகவிகைப்படி அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு, ஊழியர்கள் மத்தியில் நிலவி வ்ருகின்றது. அத்தகைய அதிகரிப்பு வருமா? ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்குமா? பொய்யாக பரவி வரும் தகவல் உண்மையாகுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications