சமீபத்திய ஆண்டுகளில் இந்திய உற்பத்தித் துறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகின்றன. இது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில், திருப்பூர்-கோயம்புத்தூர் போன்ற உற்பத்தி மையங்கள் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு என்பவரின் பயண அனுபவம் குறித்த பதிவு தற்போது வைரலாகிவருகிறது.

இதுதொடர்பாக, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில், தனது சமீபத்திய பயணத்தின் போது திருப்பூர்-கோயம்புத்தூர் தொழில் வளாகம் குறித்து பாராட்டியுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு தேசிய அளவில் கூடுதல் கவனம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திருப்பூர்-கோயம்புத்தூர் தொழில் வளாகம், இந்தியாவின் உற்பத்தித் துறையின் மிக முக்கியமான மையமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "நான் அவிநாசி சாலையில், கோயம்புத்தூரிலிருந்து வடகிழக்காக பயணிக்கிறேன், திருப்பூர் தொழில் வளாகத்தை கடந்து செல்கிறேன். இந்தப் பகுதியில், இடையே உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் முடிவற்ற தொழிற்சாலைகளின் வரிசை தொடர்கிறது," என்று ஸ்ரீதர் வெம்பு X-ல் பதிவு செய்துள்ளார். இந்த மாதிரி இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் உருவாக வேண்டும். அதற்காக இந்தப் பகுதியை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும், மேலும் இந்த பகுதி மதிப்புக் கட்டத்தில் (Value Chain) மேலும் உயர வேண்டும். இதுமட்டுமல்லாமல், "Manufacturing Tech R&D" பற்றி சில முக்கியமான விவாதங்களை நான் மேற்கொண்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, திருப்பூர்-கோயம்புத்தூர் தொழில் வளாகம் குறைந்த மதிப்புள்ள உற்பத்தியில் இருந்து உயர் மதிப்பு சேர்க்கும் (High-Value Addition) தொழில்துறையாக வளர வேண்டும் என்பதற்காக மதிப்புக் கட்டத்தை (Value Chain) மேம்படுத்த வேண்டும் என ஸ்ரீதர் வெம்பு கூறுகிறார்.
குறிப்பாக இந்தியாவின் உற்பத்தித் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்களை முன்னிறுத்தும் அண்மைய கருத்துகளின் தொடர்ச்சியாக ஸ்ரீதர் வேம்புவின் பதிவு வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள நடுத்தர அளவிலான நிறுவனங்கள், முன்பு ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் துல்லிய இயந்திரங்களை (High-Precision Machines) தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தாமஸ் சவான் பதிவுக்கு வேம்பு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பான வேம்புவின் X பதிவு பதிலில், இந்த ட்வீட்டைப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம், நான் நேரில் சென்று இந்த நிறுவனங்களை பார்வையிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது! நாம் மேம்பட்ட பொருட்கள் தயாரிக்கும் சிக்கலான இயந்திரங்களை உருவாக்கும் திறனை நிரூபிக்க வேண்டும், மேலும் அந்த இயந்திரங்களை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்படியாக செய்ய வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தாமஸ் சவானின் பதிவில், "அந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ரூ.500-ரூ.1000 கோடி மதிப்புள்ளவை. அவர்கள் செய்யும் பணியை நேரில் காண வேண்டும்; அப்போதுதான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். "நான் புனேயில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு சென்றேன். முன்பு ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த இயந்திரங்களை, இப்போது அவர்கள் தாங்களே தயாரித்து, மிகக் குறைந்த தள்ளுபடியில் (super low tolerance) உலோக பாகங்களை உருவாக்குகிறார்கள். "இப்போது அவர்கள் எல்லா இடங்களிலும் வெள்ளை மாத்திரைகளை உலகளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர்." இந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முறையில் செயல்படும் நிறுவனங்கள், இந்திய பொருளாதாரத்தின் முகத்தோற்றத்தை மாற்றிவிடும் என்று சாவன் பதிவிட்டுள்ளார்.
மேலும், "இந்த நகரத்திற்கு அனைத்துத் திறன்களும் உள்ளது, மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் இது ஒரு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மையமாகவும் (MSME Hub), தகவல் தொழில்நுட்ப மையமாகவும் (IT Hub), கல்வி மையமாகவும் (Education Hub), மருத்துவ சுற்றுலா மையமாகவும் (Medical Tourism Hub), ஆன்மிக மையமாகவும் (Spiritual Hub), விளையாட்டு மையமாகவும் (Sports Hub), ஓய்வு பெற்றவர்களின் சமூக வாழ்வு மையமாகவும் (Retirement Community Hub) மாறும் என்று டாக்டர் கலாம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர் கிஷோர் சந்திரன் கூறியுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை உறுதிப்படுத்தினார். அப்போது, உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு (PLI) திட்டங்கள் ₹1.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளன மற்றும் 9.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டம் தோல்வியடைந்ததாக கூறும் விமர்சனங்களை அவர் நிராகரித்தார். இந்தத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவியுள்ளதாகவும், குறிப்பாக பாதுகாப்புத்துறையில் இந்தியா இப்போது நிகர ஏற்றுமதி நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications