இது ரொம்ப டூ மச்.. மணமக்களே இல்லாமல் திருமண விழா.. இதுதான் இப்போ ட்ரெண்டாம்..!!

இன்றைய இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் திருமணம் செய்ய பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதிகமான கல்வி செலவுகள், வேலைவாய்ப்பு தேடல், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவ்வாறான சூழலில், குடும்பத்தினரும் பல கவலைகளை சந்திக்கின்றனர். குடும்பத்தினர் பெரும்பாலும் பாரம்பரிய உறவுகள், குடும்ப வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இளைஞர்களை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனால், இளைஞர்கள் சிலர் வாழ்க்கையின் தனிமையை உணர்ந்து, திருமணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில் தான், இந்தியாவில் இளம் தலைமுறை Gen Z, பழமையான திருமண மரபுகளை மாற்றி ஒரு புதிய பார்ட்டி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் போலி திருமண விழாக்கள் (Fake Weddings). இந்த விழாக்கள் உண்மையான திருமண விழாவை போலவே பிரம்மாண்டமாக இருக்கும். இதில் இசை, வண்ணமயமான பாரம்பரிய உடைகள், சங்கீதம் போன்ற நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, திருமணம் செய்து கொள்ளும் ஜோடி மட்டும் உண்மை கிடையாது.

இது ரொம்ப டூ மச்.. மணமக்களே இல்லாமல் திருமண விழா.. இதுதான் இப்போ ட்ரெண்டாம்..!!

இந்த திருமண நிகழ்ச்சியில் திருமணம் மட்டும் தான் நடக்காது. மற்ற அனைத்து நிகழ்வுகளும் நடக்கும். இது, முக்கியமாக விருந்தோம்பல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்பும் இளம் தலைமுறைக்கு ஒரு தனித்துவமான பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த போலி திருமண விழாக்கள் தற்போது டெல்லி, பெங்களூரு, புனே போன்ற மெட்ரோ நகரங்களில் பிரபலமாகி வருகின்றன. டெல்லியில் இதுபோன்ற நிகழ்வுக்கு இதனை ஏற்பாடு செய்யும் ஜும்மா கி ராத் என்ற நிறுவனம், நுழைவுக் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.3,000 வரை வசூலிப்பதாக இன்ஸ்டாகிராமில் முகுல் குரானா என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.

இவ்வாறான சில நிகழ்ச்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாகவே டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன. சில நிகழ்வுகள் கல்லூரி வளாகங்களில் அல்லது கருத்தரங்கில் திடீரென ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. முக்கியமாக ஜென் Z (Gen Z) என்ற இளம் தலைமுறையினர் இதை அதிகமாக விரும்புகின்றனர். ஏனென்றால், இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உறவினர்கள் இல்லை. கடுமையான மற்றும் பழமையான வழக்கங்கள் இல்லை. இந்த திருமண நிகழ்சியில் இசை, சுவையான உணவு மற்றும் ஒருமைப்பாட்டின் உணர்வு மட்டுமே இருக்கும். இந்த விழாக்களின் மைய நோக்கமே கொண்டாட்டம் தான். அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி இருப்பதற்கும், சமூக வலைத்தளத்தில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது.

இந்த போலி திருமண விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் போலி திருமண விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று இன்ஸ்டா பயனர் முகுல் குரானா தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து பயனர் ஒருவர், "இது மற்ற பல டிரெண்ட்களைப் போல சில காலத்துக்கு இருக்கும். பின்னர் மறைந்து போய்விடும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், இந்த தலைமுறையினர் எங்கு செல்லப்போகிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவர் இன்றைய தலைமுறையினர் வழிமுறைகளை இழந்துவிட்டனர். அவர்களை சரியாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தவறான பாதையில் நகர்த்தப்படுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+