ஒவ்வொரு மாதமும் உணவு விலையில் ஏற்பட்டிருக்கும் ஏற்றம் மற்றும் குறைவு குறித்து அறிக்கையை CRISIL மதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கும். அதன்படி இந்த நவம்பர் மாதத்தில் சைவ சாப்பாட்டின் விலை அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல அசைவ சாப்பாட்டின் விலை எந்தவித மாற்றமுமின்றி சீராக இருந்து வருகிறது.
சைவ சாப்பாட்டின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் தக்காளி விலை குறைந்ததே. அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை 17 சதவீதம் வரை குறைந்துள்ளது.

சமையல் எண்ணெயின் விலை 4 சதவீதமும், வெங்காயத்தின் விலை 4 சதவீதமும் மற்றும் உருளைக்கிழங்கின் விலை 1 சதவீதமும் அதிகரித்து சைவ சாப்பாட்டின் விலை சரிவை தடுத்து நிறுத்தியது. அசைவ சாப்பாட்டில் பிராய்லர் கோழியின் விலை 2 சதவீதம் அதிகரித்ததன் காரணமாக எந்தவித மாற்றமுமின்றி அப்படியே இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சைவ சாப்பாட்டில் ரொட்டி, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, அரிசி, பருப்பு, தயிர், சாலட் ஆகியவை இருக்கும். அதே நேரம் அசைவ சாப்பாட்டில் பருப்புக்கு பதிலாக கோழி மற்றும் இதர காய்கறிகள் இருக்கும். இந்த அறிக்கை இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் வீட்டில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் விலை 7.2 சதவீதமும், அசைவ சாப்பாட்டின் விலை 1.8 சதவீதமும் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கும். இந்த அதிகரிப்பு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக சைவ சாப்பாட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் பங்கு 26 சதவீதம் இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரோடு ஒப்பிடுகையில் தக்காளி விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் குறைந்த விளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு உருளைக்கிழங்கின் விலையும் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் பருப்பு விலை 10%, சமையல் எண்ணெயின் விலை 13%, எரிபொருளின் விலை 11 சதவீதமும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசைவ சாப்பாட்டில் பிராய்லர் கோழியின் விலை 3 சதவீதம் சரிந்துள்ளது. அசைவ சாப்பாட்டை பொருத்த வரையில் கோழியின் பங்கு 50 சதவீதம் இருக்கிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் டிசம்பர் முதல் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், புதிய பொருட்கள் சந்தைக்கு வந்து கொண்டிருப்பதால் சைவ சாப்பாட்டின் விலை மேலும் குறையும் என்றும் கிரிஸில் சந்தை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு இயக்குனரான புஷன் சர்மா கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications