இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தக ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 15.5% குறைந்துள்ளது. எனினும் அதே காலகட்டத்தில் விவசாய பொருட்கள் ஏற்றுமதியானது 9.8% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணத்தால், இந்தியாவில் அத்தியாவசியம் தவிர அனைத்து உற்பத்தி துறைகளும் முடங்கின. இதன் காரணத்தால் விலையும் அதிகரித்தது. ஏற்றுமதியும் பாதித்தது.
ஆனால் மறுபுறம் லாக்டவுனால் விவசாய உற்பத்தியானது பாதிக்கப்படவில்லை. இதனால் இதன் ஏற்றுமதியும் அதிகரித்தது. அதிக தேவை காரணமாக விலையும் அதிகரித்தது.
விவசாய பொருட்கள் ஏற்றுமதி
இது குறித்தான வர்த்தக அமைச்சகத்தில் தரவின் படி, அனைத்து பொருட்களின் ஏற்றுமதியும் ஏப்ரல் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் 201.30 பில்லியன் டாலர்களாக குறைந்ததாக காட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் விவசாய பொருட்கள் ஏற்றுமதியானது 26.34 பில்லியன் டாலரில் இருந்து 28.91 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
விவசாய பொருட்கள் இறக்குமதி
இதே காலகட்டத்தில் விவசாய துறை சார்ந்த பொருட்கள் இறக்குமதியானது 5.5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணம விவசாய துறையில் உபரி 9.57 பில்லியன் டாலரில் இருந்து, 13.07 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேமற்ற பொருட்கள் ஏற்றுமதியானது சரிந்துள்ளது.
என்னென பொருட்கள் அதிகம்
குறிப்பாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 110.12% அதிகரித்துள்ளது. காட்டன் (Row cotton) ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்த்ல் 95.06 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கோதுமையின் ஏற்றுமதியானது 428.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே மற்ற தானியங்களின் ஏற்றுமதியானது 174.05 சதவீதம் ஏற்றுமதி கண்டுள்ளது.
எந்த நாட்டிற்கு அதிக ஏற்றுமதி?
இந்த ஏற்றுமதி விகிதமானது குறிப்பாக ஐரோக்கிய ஐக்கிய நாடுகளுக்கு அதிகரித்துள்ளது. அதோடு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் அதிகளவு தேவை இருந்த காரணத்தினால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு, விலையும் கூடியுள்ளது.