விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாததால் தொழிலை மாற்ற விரும்பிய விவசாயி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்க 6 கோடி ரூபாய் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஒரு விவசாய நாடு என்பதும், விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.
நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டும் கேள்விக்குறியாக தான் உள்ளது.
விவசாயி நிலைமை
ஊருக்கெல்லாம் உணவு கொடுக்க விவசாயி அரை வயிறு, கால் வயிறுடன் பட்டினியாக இருந்து கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சோக நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
விவசாய வருமானம்
இந்நிலையில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் விவசாயத் தொழிலில் போதுமான வருமானம் இல்லை என்றும் அதனால் ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடும் தொழிலை செய்ய ரூ. 6.65 கோடி கடன் கேட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் வாங்க கடன்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தக்தோதா என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 விவசாயி கைலாஷ் பதங்கே என்பவர் தான் இந்த நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, 'எனக்கு சொந்தமான இரண்டு ஏக்கரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். ஆனால் போதுமான மழை இல்லாத காரணத்தினாலும் வறட்சி காரணத்தினாலும் எனக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்தும் எனக்கு உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை.
பெரிய கனவு
எனவே தான் தொழிலாக மாற்ற முடிவு செய்தேன். வங்கியில் லோன் வாங்கி ஹெலிகாப்டர் வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளேன். பெரிய நபர்கள் மட்டும் தான் பெரிய கனவுகள் காண வேண்டுமா? எங்களைப் போன்ற விவசாயிகளும் பெரிய கனவுகளை காணலாமே? எனவேதான் ஹெலிகாப்டர் வாங்க ரூ.6.65 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தொழில் போட்டி
மேலும் மற்ற தொழிலில் போட்டி அதிகம் என்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் தொழில் போட்டி இல்லை என்பதால் இந்த தொழிலை தேர்வு செய்தேன் என்றும் அவர் கூறியது வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில் விவசாயி கைலாஷ் பதங்கேவின் வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு வங்கி என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications