இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் வறட்சிக்கு பேர் போனது. பெரிய அளவில் நிலம் இருந்தாலும் வறட்சி விவசாயத்தில் காரணமாக வருமானம் ஈட்ட முடியாது. ஆனால் வறண்ட பூமியில் டிராகன் பழங்களை விளைவித்து கோடிகளில் வருவாய் ஈட்டுகிறார் ஒரு இளைஞர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாபூரை சேர்ந்த மகேஷ் அசாபேவுக்கு சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம். எனவே சோலாபூரில் உள்ள வேளாண் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் பயின்றார்.

பின்னர் அதே துறையில் எம் டெக் முடித்தார். அப்போது நாளிதழ் ஒன்றில் டிராகன் பழம் குறித்த கட்டுரையை வாசித்தார். அப்போது , நம்ம ஊரில் ஏன் இதை விளைவிக்க கூடாது என்ற யோசனை வந்தது.
வறட்சியிலும் வளரும் டிராகன் பழம்: டிராகன் பழத்தை பொறுத்த வரை அதற்கு பெருமளவில் தண்ணீர் தேவைப்படாது. குறைந்த தண்ணீரிலே வளரும் தன்மை கொண்டது.
எனவே இது வறண்ட மாநிலங்களுக்கு உகந்தது. மகேஷ் அசாபே தன்னுடைய தந்தையிடம் இந்த யோசனையை தெரிவித்து, குடும்பத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் 9,000 டிராகன் மரக்கன்றுகளை நட்டார்.
ஒரு ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வருமானம்: மரக்கன்றுகளை வைத்த முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 5 டன்கள் பழம் விளைந்தது. இதன் மூலம் அவருக்கு கிடைத்த வருமானம் ரூ.5 லட்சம்.
அதுவே இரண்டாவது ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 10 டன்கள் பழம், ரூ.10 லட்சம் வருமானம் என உயர்ந்தது. எனவே அவர் 20 ஏக்கர் நிலம் வாங்கி அதில் டிராகன் பழ விவசாயம் செய்து வருகிறார்.
தொழில் விரிவாக்கம்: தற்போது 20 ஏக்கர்களில் டிராகன் பழங்களிலேயே பல வகையான கன்றுகளை நட்டு விளைச்சல் பார்த்து வருகிறார் மகேஷ் அசாபே, அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹோல் சேல் பழக்கடைகள் தான் இவர்களின் வாடிக்கையாளர்கள். ருக்மினி ஃபார்ம்ஸ் அண்ட் நர்சரி என்ற பெயரில் டிராகன் பழம் மரக்கன்றுகளை விற்பனை செய்து வருகிறார்.
மொத்தமாக ஓராண்டில் டிராகன் பழங்கள் மூலம் 2 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்டுகிறார் மகேஷ் அசாபே.
டிராகன் பழங்கள் சத்து நிறைந்தவை என மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.எனவே இந்த தொழிலின் எதிர்காலம் நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறுகிறார்.
விவசாயம் செய்ய வேண்டும் , வறட்சியும் வளரக்கூடிய பயிராக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மகேஷின் வழியை பின்பற்றலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications