கொரோனா தொற்றில் இருந்து இந்தியா இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை என்றாலும் பல துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. இதனால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகளவிலான முதலீட்டை செய்தனர்.
ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது.
அன்னிய முதலீடு
2021-22 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் சுமார் 83.57 பில்லியன் டாலர் அளவிலான FDI (வெளிநாட்டு நேரடி முதலீடு) முதலீடுகளை இந்தியா பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் அன்னிய முதலீட்டின் அளவு 81.97 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறை
உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு விருப்பமான நாடாக இந்தியா இருந்தது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் வாய்ப்பை பெற்று இருந்த காரணத்தால் ஒரே வருடத்தில் அதிகப்படியாக 83.57 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு குவிந்துள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறை
இந்திய உற்பத்தி துறையில் அன்னிய முதலீடுகளின் அளவு 2020-21 ஆம் நிதியாண்டில் 12.09 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2021-22ஆம் நிதியாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 76 சதவீதம் அதிகரித்து 21.34 பில்லியன் டாலர் முதலீட்டை பெற்றுள்ளது.
சிங்கப்பூர்
இதேபோல் 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகளில் மொத்த முதலீட்டில் 27 சதவீத தொகையுடன் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து 18 சதவீத அளவீடு உடன் அமெரிக்கா, 16 சதவீதம் தொகை உடன் மொரிஷியஸ் ஆகியவை முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
முக்கியத் துறை
மேலும் அதிக முதலீட்டை பெற்ற துறைகளில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர், ஹார்டுவேர் துறை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சேவை துறை, ஆட்டோமொபைல் துறை ஆகியவை முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
ஏப்ரல் 2022 நிலைமை வேற
இவை அனைத்தும் மார்ச் 31க்கு முன்பு, ஏப்ரல் மாதம் துவங்கிய உடன் நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் மூலம் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறி வருகிறது. ஆர்பிஐ தரவுகள் படி மார்ச் 2022ல் 3446.01 மில்லியன் டாலர் வெளியேறிய நிலையில், ஏப்ரல் மாதம் 6714.89 மில்லியன் டாலர் வெளியேறியது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications